Pages

Saturday, 12 December 2020

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன?


தகவல் அறியும் உரிமைச் சட்டம்

  • இச்சட்டத்தின் மூலம் இந்திய மக்கள் பொது அதிகார அமைப்பிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற முடியும்.
  • பொது அதிகார அமைப்பின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் உரிய பொறுப்பை ஏற்படுத்தவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • இது 12.10.2005ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு தொடர்பான நடவடிக்கைகளை சாதாரண கடைக்கோடி இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.
  • இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. ஆனால் கடந்த 6–8–2019ல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் மூலம் அந்த யூனியன் பிரதேசமும் இதனுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இதற்கு முன் ஜம்மு காஷ்மீருக்கு என தனி தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது. ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதால் அதன் சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.
  • இச்சட்டத்தில் கூறப்பட்ட பொது அதிகார அமைப்பு என்பது நிர்வாகம், நீதித்துறை & சட்டமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இதில் அரசால் நிர்வகிக்கப்படும் / நிதியுதவி வழங்கப்படும் நிறுவனங்களும் இச்சட்டத்தின் வரையறைக்குள் அடங்கும். (95% நிதியுதவி)
  • பொது அதிகார அமைப்புகள் தங்களிடம் உள்ள தகவல்களை வரிசைப்படுத்தி கணினிமயமாக்கப்படும்.
  • தகவல் கோர மனுதாரர் எக்காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
  • இச்சட்டப்படி ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
  • தகவல் கோரி பெறப்பட்ட மனுவுக்கு 30 நாட்களுக்குள் அத்துறை சார்ந்தோர் தகவல் அளிக்க வேண்டும்.
  • ஒருவேளை தகவல் தனது துறை சார்ந்ததாக இல்லாதபோது அம்மனுவை 5 நாட்களுக்குள் உரிய துறைக்கு அனுப்ப வேண்டும்.
  • 3 வது நபர் தகவல் தொடர்பானவற்றுக்கு உரிய காரணங்களுடன் 15 நாட்கள் கால அவகாசம் பெறலாம்.
  • இச்சட்டப்படி ஒருசில தகவல்களை வழங்க முடியாது
    • நாட்டின் இறையாண்மை & ஒற்றுமையை பாதிப்பது தொடர்பான தகவல்கள்
    • பொருளாதாரம் & அறிவியல் தொடர்பான தகவல்கள்
    • உரிய நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல்கள்
    • 3வது நபரின் வணிக ரகசியம், அறிவு சார்ந்த தகவல்கள்
    • பாராளுமன்ற, சட்டமன்றத்தின் சிறப்புரிமைகளை பாதிக்கும் தகவல்கள்
    • பிற நாடுகளிடமிருந்து பாதுகாப்பாக பெறப்பட்ட தகவல்கள்.
    • சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பிடமுள்ள தகவல்
    • குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை பாதிக்கும் வகையான தகவல்கள், இவற்றை வழங்க முடியாது.
  • அமைச்சரவை குழுவின் முடிவுகளை செயல்படுத்தாத வரை தகவல் வழங்க முடியாது.
  • தமிழக அரசுத் துறையிலிருந்து தகவல் பெற ரூ.10 உம், நகல் கட்டணமாக ரூ.2 / பக்கமும் செலுத்த வேண்டும்.
  • வங்கி வரைவோலையாகவும், நீதிமன்ற இரசீது செலுத்தலாம்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் இல்லை.
  • இத்தகவல்கள் கீழ்க்கண்ட வடிவுகளில் இருக்கலாம்.
    • பதிவேடுகள்
    • ஆவணங்கள்
    • குறிப்பாணைகள்
    • மின்னஞ்சல்கள்
    • கருத்துக்கள்
    • அறிவுரைகள்
    • சுற்றறிக்கை
    • செய்தி வெளியீடு
    • ஆணை
    • ஒப்பந்தம்
    • முடிவுகள்
    • மாதிரிகள்
    • உருமாதிரிகள்
    • மின்னணு வடிவிலுள்ள தகவல்கள் பொது அதிகார அமைப்பிடம் உள்ள 3வது நபர் குறித்த தகவல்கள்.
  • பதிவேடு - கோப்புகள், ஆவணங்கள், கையால் எழுதப்பட்ட தாள்கள், குறுங்கோப்புகள், குறும்படங்கள், ஃபேக்ஸ் (Fax), வரைபடங்கள் இன்ன பிற.

No comments:

Post a Comment