Pages

Sunday, 22 November 2020

பழைய சாதம் என்னும் பழையிது உலகில் சத்தாண உணவு.

 உண்மையில் பழையதில் சத்து இருக்கிறதா? ஏனென்றால், சாதத்தில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் சாப்பிடும் போது அதில் சத்து சேர்ந்து விடும், என்று சொல்கிறார்களே. அது எந்த அளவுக்கு சரியாக இருக்கும். அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா?


பொதுவாக மதியம் சமைத்த சோற்றை மண்பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி வைத்து,மறுநாள் காலையில் அதில் கொஞ்சம் தயிர் ஊற்றி, சின்ன வெங்காயம் நறுக்கிப் பொட்டோ அல்லது வெறும் ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாலோ மிகவும் சுவையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இதனைத் தான் பழைய சோறு / பழைய சாதம் என்று சொல்வோம்.

அதெல்லாம் சரி, சோற்றில் வெறும் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டால் அதில் எப்படி சத்துக்கள் சேரும் ??

அதற்கு காரணம் நமக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் (பாக்டீரியா) தான். இவற்றின் வேலை உணவை நொதிக்க (Fermentation) வைப்பதாகும். இச்செயல் நடக்கும் போது அரிசியில் உள்ள கூட்டுச் சர்க்கரைகள் மற்றும் பிற சத்துக்கள் பாக்டீரியாவால் உண்ணப்பட்டு எளிய பொருட்களாகவும், ஆல்கஹால் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடாகவும் நமக்கு கிடைக்கும் (பால் தயிராவதும் இந்த நொதித்தல் முறையே!). எனவே தான் பழைய சோற்றில் (அ) நொதிக்க வைத்த உணவுகளில் சத்துக்கள் அதிகம் . இலேசான புளிப்புச் சுவையும் இதனால் தான்!

பழைய சோற்றின் நன்மைகள்:

  1. மேற்கூறியது போல, நல்ல பாக்டீரியாக்கள் கூட்டுச் சர்க்கரைகளை எளிய சர்க்கரைகளாக மாற்றி விடுவதால், நாம் அதை உண்ணும் பொழுது விரைவில் செரிமானம் ஆகும்.
  2. அரிசியில் இருக்கும் முக்கிய கூறு, பாஸ்பரஸ் நிறைந்த ஃபைட்டிக் அமிலம் (Phytic acid) ஆகும். ஆனால் இந்த பாஸ்பரஸ் கூறுகள் மற்றும் இதர நுண்ணூட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, மக்னீசியம், ஜின்க் போன்றவை ஃபைட்டிக் அமிலத்துல் ஒன்றோடு ஒன்று வலுவாக பிணைக்கப்பட்டுள்ளதால், இந்த சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது / குறைந்த அளவே கிடைக்கிறது. பழைய சோற்றில் நுண்ணுயிரிகள் இவற்றை செரித்து விடுவதால் இந்த சத்துக்களின் பிணைப்புகள் உடைந்து நம் உடலுக்கு கிடைக்கிறது. எனவே தான், சாதத்தில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் சாப்பிடும் போது அதில் சத்து சேர்ந்து விடும், என்று சொல்கிறார்கள்.
  1. உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியளிக்கிறது. வெயில் காலத்திற்கேற்ற அருமையான உணவு.
  2. பழைய சோறில், ப்ரோபையோட்டிக்ஸ் (Probiotics) என்று அழைக்கப்படும் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மிகுந்துள்ளதால், நம் மொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

>> இரத்த அழுத்தத்தை சமச்சீராக்குகிறது.

>> மலச்சிக்கலை குணப்படுத்துகிறது

>> அதிக ஆற்றல் தருகிறது. நாள் முழுதும் புத்துணர்வுடன் இருக்கலாம்

>> வயிற்றுப்புண் மற்றும் இதர அல்சர் வகைகளை குணமாக்கும்


No comments:

Post a Comment