திராவிடம் என்பது ஒரு சமஸ்கிருத சொல் இது தென்னக பிராமணர்களை குறிக்க பயன்பட்ட ஒரு சமஸ்கிருத சொல்.
வட பிராமணர்களை குறிக்க பஞ்ச கௌட என்றும் தென் பிராமணர்களை குறிக்க பஞ்ச திராவிட என்றும் அழைப்பர்.
ராகுல் திராவிட், மணி ஷர்மா திராவிட் என்று தங்கள் பெயருக்கு பின்னால் திராவிட் என்று பெயரிடும் வழக்கம் தொன்றுதொட்டு பிராமணர்களிடையே உண்டு.
திராவிட மேட்ரிமொனி என்று தெலுங்கானாவில் பதிவு செய்யப்பட்ட இணையத்தில் சென்று பார்த்தால் அது பிராமணர்களுக்கான திருமண வரன் பார்க்கும் தளம் என்பது விளங்கும்.
கால்டுவெல் அவர்கள் தென்னக தமிழ் மொழிக்குடும்பத்தை குறிக்க அவர் எடுத்து கையாண்ட ஒரு சமஸ்கிருத சொல் தான் இந்த திராவிடம் என்பது, அவரே இதை மனு ஸ்ம்ருதியில் இருந்து தான் எடுத்து கையாண்டதாக தெரிவிக்கிறார்.
தமிழ் சங்க இலக்கியங்களில் எங்குமே திராவிடம் என்ற சொல் கிடையாது, திராவிடம் என்ற சொல்லை வழக்கம் போல ஆரியர்கள் தமிழில் இருந்து 'தமிழ்' என்ற சொல்லில் இருந்து தான் களவாடினார்கள். களப்பிரர்/பல்லவர் ஆட்சியில் வஜ்ர நந்தி என்ற சமணர் கிபி 470ல் திரமிள சங்கம் என்ற ஒரு தமிழ் சங்கத்தை தோற்றுவித்தார் இவர்கள் பயன்படுத்திய மொழி தமிழும் பிராகிருதமும்.
பின்னாளில் இந்த பிராகிருத மொழியில் இருந்து தான் திரமிள என்ற வார்த்தையை ஆரியர்கள் சமஸ்கிருதத்தில் திராவிட என்று சேர்த்தார்கள்.
தமிழ் → திரமிள → திராவிட;
அதாவது தமிழின் திரிந்த வடிவம் பல இடங்களில் சுற்றி ஆரியரின் வாயில் திராவிட என்று வந்தது, அப்போதும் அவர்கள் அதை தமிழர்களை சுட்ட பயன்படுத்தவில்லை பிராமணர்களை சுட்ட தான் பயன்படுத்தினர்.
பார்பனரையும் பார்பனீயத்தையும் எதிர்ப்பதாக சொல்லும் திராவிட இயக்கங்களின் தலைவரான ஈவெரா அவர்களை முத்தமிழ் காவலர் திரு. கிஆபெ விசுவநாதம் போன்ற தமிழ் அறிஞர்கள் கேட்டுக்கொண்டதை எல்லாம் நிராகரித்து நீதிக் கட்சிக்கு தமிழர் கழகம் என பெயர் வைக்காமல் திராவிடர் கழகம் என்றே பெயரிட்டார்.
அவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் எப்போதுமே தெளிவு தான் தமிழர்கள் தான் புரிதல் இல்லாதவர்கள்!
திராவிடம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சொந்தமான வார்த்தை / தத்துவம் அல்ல! திராவிடம்… தீரா விடம்!
கிமு நூற்றாண்டில் கிடைத்த தகவல் படி இதுவே உண்மையான திராவிடம் பொருள் :
திரு என்றால் இறை.
இந்நிலம் திருவிடம்!
திராவிடம் அல்ல!!
ஒரு சொற்பொழிவில் வள்ளலார் சன்மார்க்க
பெரியவர் ஒருவர் விளக்கினார்.
எண்ணற்ற ஞானிகளும் சித்தர்களும் நிரம்பியது
தென்னாடு எனும் தமிழ் நிலப்பகுதி.
திரு என்றால் இறை.
திரு நிறைந்த இடமாக விளங்கியதால் இப்பகுதி
திருவிடம் என்று அழைக்கப்பெற்றது. பின் அது
திராவிடமாக மருவியது. ஆனால் இன்று பலர்
திராவிடம் என்றால் இறை மறுப்பு கொள்கை
என்று தங்களை அடையாளப்படுத்தி
வருகின்றனர். மொழியறிவு எவ்வளவு அவசியம்
என்று கற்றவர்கள் உணர்தல் வேண்டும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment