Pages

Thursday, 12 November 2020

பாலைவனங்களின் பயன்கள் என்ன

 

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" -சிலப்பதிகாரம்.

இந்த பூமியின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், இவ்வளவு செழிப்பாகவும், அடர்த்தியாகவும் இருப்பதற்கு மிகமுக்கியமான ஒரு காரணம், சஹாரா பாலைவனம் தான் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இயற்கையின் மற்றுமொரு சுவாரசியமான விளையாட்டு இது.

கிழக்கிலிருந்து வீசும் காற்று, சஹாராவின் மணலை கடத்தி அட்லாண்டிக் பெருங்கடலைதாண்டி தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் கொட்டுகிறது. இந்த காற்று பல தாதுக்களை குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு காரணமான பாஸ்பரஸை 50% மேல் வந்து கொட்டுகிறது. வருடத்திற்கு, 27 மில்லியன் டன் தாதுக்கள் சஹாராவில் இருந்து பயணித்து அமேசான் காட்டில் விழுந்து அதை வளப்படுத்துகிறது. வருடாவருடம் கொட்டும் மழையினால் இழக்கும் பாஸ்பரஸை, சஹாராவின் உதவியால் தான் அமேசான் பூர்த்தி செய்துகொள்கிறது. எவ்வளவு அற்புதம்!!

மழைவளம் இல்லாத வெறும் சுடுமணல் நிலப்பரப்பு மட்டும் பாலைவனம் அல்ல. வட மற்றும் தென் துருவத்தின் பனிக்கட்டி நிரம்பிய நிலப்பரப்பும் பாலை வகையை (குளிர் பாலைவனம்) சேர்ந்தது தான். அதேபோல் இந்த பனிப்பாலைவனங்கள் தான் உருகி, உலகின் பல நன்னீர் நதிகளை நிரப்புகின்றன.

உலகின் 70% எண்ணெய்கிணறுகள் பாலைவனங்களில் தான் அமைந்துள்ளன.

பாலைவனங்கள் தாதுக்கள் சேகரிப்பிற்கும், சூரிய மின்சக்தி சேகரிப்பிற்கும் மிகவும் பயன்படுகிறது. இந்தியாவின் தார் பாலைவனத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் சோலார் தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சொட்டுநீர் பாசன முறையில் இஸ்ரேல் நாடு, பாலைவனத்தில் விவசாயம் செய்கிறது. இப்போது அல்ல, 5000 ஆண்டுகளுக்கு முன்பே நைல் நதிநீர் பாசனத்தில் எகிப்தின் பாலைவனத்தில் விவசாயம் நடந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விதைகள் சேகரிப்பு கிடங்கு, பதப்படுத்தும் சீதோஷண நிலைக்காக நார்வேயின் பனிப்பாலைவனத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment