Pages

Tuesday, 10 November 2020

தியானம் என்றால் என்ன


  1. யார் கடவுளை இடையறாது தியானிக்கின்றாரோ அவர் முற்றிலும் பயம் அற்றவர் ஆகின்றார்
  2. விவேகம் என்னும் கதவை திறக்கும் வழி தியானம் ஆகும்
  3. தியானம் அமைதியை நல்குகின்றது
  4. தியானம் உள்ளுணர்வு தருகின்றது
  5. தியானம் முகத்திலும் உடல் முழுவதும் ஒரு ஆன்மீக ஒளி தருகின்றது
  6. தியானம் நங்கூரம் போல மனதை சமநிலையில் வைக்கின்றது
  7. தியானம் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றது
  8. தியானம் அந்தரங்க பலத்தை தருகின்றது
  9. ஆன்மாவிற்கு மிகவும் தேவையான உணவு தியானமே ஆகும்
  10. ஞானத்தின் திறவுகோல் தியானம் ஆகும்
  11. தீய ஆசைகள் மற்றும் உணர்ச்சிகள் கட்டுக்குள் நிற்கும்
  12. மனதின் நெறியற்ற எண்ணங்களால் சக்தி விரயமாவது தடுக்கப்படுகிறது
  13. வேறு எந்த வழியிலும் கிடைக்காத ஓய்வு தியானம் மூலம் கிடைக்கின்றது
  14. சக்தி கேந்திரங்கள் திறக்கப்படுவதால் அனைத்து தடைகளும் நீங்குகின்றன
  15. பல்வேறு நற்குணங்கள் விருத்தி செய்ய முடியும் உ..ம் அன்பு, தூய்மை, பொறுமை, பணிவு, உண்மை போன்றவை.

தியானம் செய்யும் போது அமர்ந்து இருக்கும் நிலை. வஜ்ராசனம் முடியாதவர்கள் சாதாரணமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளலாம்

தியானம் செய்யும் அறையை மனதிற்கு இரம்மியமாக அமைத்து கொள்வது சிறப்பாக அமையும். அடிப்படையில் தூய்மை போதுமானது.

கீழ்க்கண்ட படத்தில் இருக்கும் பொருட்கள் ஆரம்ப நிலையில் தியானம் செய்ய சிறந்த உதவியாக இருக்கும்.

தியானம் செய்யும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு மூன்றாவது மனிதன் பார்ப்பது போல உங்களுக்கு வெளியே இருந்து கவனிக்க வேண்டும்

நாளடைவில் பழக பழக எண்ணங்கள் மீதான கவனம் சுருங்கி உணர்வு நிலையில் மனம் லயிக்கும்

தியானம் உடல் வலிமை மிக்கவர்களுக்கு தேவை அற்றது என்பது தவறான கருத்து. பல தியான வீரர்கள் பலம் மிக்கவர்கள்

தைலதாரை ஒழுகுதல் போல தொடர்ந்து ஒரே எண்ணத்தில் மனம் ஒடுங்க செய்ய வேண்டும்

தொடர்ந்து தினமும் காலையில் தவறாமல் பயிற்சி செய்து வரும்போது சில சமயங்களில் சலிப்பு ஏற்படலாம். அப்போது கீழ்க்கண்ட இது போன்ற சில நூல்களை வாசித்து மனதை நேர் செய்து கொள்ள வேண்டும்

சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது வெளி இடங்களில் பசுமை நிறைந்த இயற்கை சூழலில் மற்றும் நீர்நிலைகள் அருகே தியானம் செய்து வருவது பயிற்சியில் புதிய பரிமாணங்களை தரும்

உங்கள் வீட்டில் சிறுவர் சிறுமியர் இருந்தால் 8 முதல் 10 வயதில் இருந்தே பயிற்சி வழங்கலாம். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து வன்முறை மனப்பான்மை மற்றும் வன்முறை சம்பவங்களை முற்றிலும் அகற்ற முடியும் என்கிறார் தலாய் லாமா

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

தமிழ் வாழ்க

No comments:

Post a Comment