நபிகள் நாயகம் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் மற்றும் கடவுளைப் பற்றி அவர் கூறியவை என்ன?
சரித்திர நாயகன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் 63 ஆண்டுகள் வாழ்ந்தார்.
நபி பெருமான் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் இறந்துவிட்டார். நபி (ஸல்) அவர்களின் தாய் இளம் வயதிலேயே அன்னை ஆமினா இறந்துவிட்டார். தந்தையை இழந்த அனாதைக் குழந்தையான முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சிறிது காலம் அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் இறந்த பிறகு சிறிய தந்தையாகிய ஆபூதாலிப் அவர்களால் வளர்க்கப் பெற்றார்.
மனிதர்களிடம் அவர் ஒருவித கல்வியறிவும் கற்கவில்லை. எனவேதான், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபி என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. ஆனால், அவர் தெய்வீகக் கல்வி அறிவு பெற்றிருந்தார்.
உண்மை, ஒழுக்கம். மரியாதை, பக்தி, கண்ணியம், நம்பிக்கை, இரக்கம், பொறுமை, நேர்மை, விசுவாசம், கற்பு, வாக்குறுதி முதலிய இம்மை மறுமையில் நற்பயன் விளைவிக்கக் கூடிய நற்குணங்கள் அனைத்தும் பெருமானாரிடம் இருந்தன.
நபிகள் நாயகம் அவர்களின் 35 வயதில் ஹஜருல் அஸ்வத் என்னும் கல்லை உரிய இடத்தில் வைப்பதற்கு குறைஷியர்கள் அவர்களின் தீர்ப்பை விரும்பி கேட்க அப்படியே செய்தார்கள் நபிகள் அவர்கள். ஆகவே அவர்களுக்கு "அல் அமீன்" (நம்பத்தக்கவர்) என்னும் சிறப்பு பட்டத்தை அளித்தனர்.
சின்னச்சிறு வயதினிலே தனித்திருப்பதை விரும்பினார்கள் அதெற்கென நேரம் ஒதுக்கி உலகின் சீர்கேடு, அதை தவிர்க்க வழிமுறைகள், இறைவனை பற்றிய தியானம் முதலியவற்றில் தனது சிந்தனைகளை செலுத்தினர். மக்காவில் இருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள ஹிரா குகைக்கு சென்று தியானித்துக்கொண்டிருந்தார்.
தனது 40 வயதில் நபித்துவத்தை பெற்றார்.
நபிகள் நாயகம் அவர்கள் நபியானதும் அபூபக்கர்(ரலி), அலி (ரலி), கதிஜா (ரலி), ஸைத் (ரலி) போன்றோர் முதன்முதலில் (ஈமான்) நம்பிக்கை கொண்டனர்.
அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க முதலில் மறைமுகமாகவும், பின்னர் பகிரங்கமாகவும் இஸ்லாம் மதத்தை போதித்தார்.
மார்க்கத்தின்பால் அழைக்கும் பணியில் ஈடுபடும்போது பல்வேறு இன்னல்களை சந்தித்தார்கள்.கற்களை எரிந்து துன்புறுத்தினார்கள், அவர்களின் பரிசுத்த மேனியில் குப்பைகளை கொட்டினார்கள், கனத்த சராசரப்பானா புடவையையை கொண்டு அன்னாரின் கழுத்தில் திருகினார்கள், அழுகிய அசுசியான குடலைக்கொண்டு வந்து மாலையாக போட்டனர் அவர்கள் பட்ட கஷ்டங்களும், கவலைகளும் சொல்லிலடங்காதவை.
எனினும் மெல்ல மெல்ல இஸ்லாம் வளர்ந்தது நபித்துவத்தின் 11ம் ஆண்டு மதீனாவாசிகள் ஆறுவர் இஸ்லாத்தை தழுவினர். அடுத்த ஆண்டு பன்னிருவர் இஸ்லாத்தை தழுவினார். மதினாவில் இஸ்லாம் வளர்ந்தது. ஒரு சமயத்தில் குறைஷிகளின் அட்டூழியம் தாங்க முடியாதநிலையில் மதினாவில் இஸ்லாம் வளர்ச்சியடையும் நிலையில் அல்லாஹ்வின் ஆணைப்படி நபியவர்கள் மக்காவில் இருந்து மதினா சென்றார்கள். மதினாவில் அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றார்கள்.
சன்மார்கத்தையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம்களுக்கு யுத்தம் விதிக்கப்பட்டது இருபத்தியேழு யுத்தங்கள் நிகழ்ந்தன. நபி அவர்கள் சண்டை செய்தது ஒன்பது யுத்தங்களில்.
இதுமட்டுமின்றி திருவிழாக்களிலும் மேடைகளை அமைத்து இஸ்லாத்தை பரப்ப முயற்சித்தனர். மதினா வாசிகள் இஸ்லாத்தை ஏற்றது இஸ்லாம் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
நபிகள் நாயகம் அவர்கள் உம்ராவெனும் வணக்கத்தை நிறைவேற்ற மக்கா நகரை நோக்கி புறப்பட்டார்கள் இதையறிந்த குறைஷியர் ஹுதைபியா என்னும் இடத்தில் தடுத்து மக்காவினுள் புகவிடாமல் போர் புரிய தயாராகி வந்தார்கள் ஆனால் நபியவர்களோ நாங்கள் போர் புரியும் நோக்கத்தோடு வரவில்லை மக்காவை தரிசிக்கவே வந்தோம் என்று கூற அங்கு சில உடன்படிக்கை செய்து கொண்டனர் ஆனால் குரோஷியார்களோ சில காலங்களிலே அதனை மீறிவிட்டனர் அதனால் நபியவர்கள் ரமலான் மாதத்தில் 10,000 வீரர்களுடன் சென்று ரத்தம் சிந்தாமல் மக்காவை கைப்பற்றினார்கள். அதுமட்டுமின்றி அங்குள்ளோருக்கு பெருந்தன்மையுடன் மன்னிப்பையும் அளித்துவிட்டனர்.
ஹிஜ்ரத் 10 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து பதினாராயிரம் பேர்களுடன் சேர்ந்து தனது முதல் ஹஜ் பயணத்தை மேற்கொண்டார். இதுவே அவர்களின் கடைசி ஹஜ் பயணமும் கூட.
கடைசியாக தனது 63 வயதில் ஹிஜ்ரத் 11ம் ஆண்டு தனது மனைவி ஆயீஷா ரலி அவர்களின் வீட்டில் அவர்களின் மடியில் தலை வைத்தவர்களாக இந்த உலகை விட்டு பிரிந்தார்கள். அவர்களின் வீட்டிலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.
மனைவியின் மடியில் உயிர்போகும் என்றால் எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும் நினைத்துப்பாருங்கள். எத்தனை பேருக்கு இது அமைத்திருக்க கூடும் நினைத்துப்பாருங்கள்.
உலக மக்களை நோக்கி நபியவர்கள் மூன்று சொற்றொடரை சொன்னார்கள் அது
அன்னியனுடைய உடைமைக்கு ஆசை படாதே
அன்னியவுடமை என்பது மண்ணையும் குறிக்கும், பொன்னையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும்.
நபியவர்கள் தங்களது மனைவிமார்களையோ வேலைக்காரர்களையோ ஒரு போதும் அடித்தது இல்லை, தன் தாய் ஒருமுறை வந்திருக்க தனது மேல் சட்டயயை கழட்டி தரையில் விரித்து அமரச்செய்தார்கள் , தனது மகள் பாத்திமா வருவதை கண்டால் எழுந்து நிற்பார்கள், உயர்ந்த பதவியில் இருந்தும் சஹாக்கள் சபைக்கு சென்றால் கடைசியில் தான் அமர்வார்கள், இரப்போர்க்கு ஈர்ந்து விட்டு தாங்கள் பட்டினி இருப்பார்கள், தீமை செய்தோருக்கு சாபமிடும்படி கூறினால் நான் உலகோர்க்கு கருணைக்கு அனுப்பட்டேனேயன்றி சாபமிடவறவில்லை என்பார்கள். மக்காவை சரணடைந்த போது பழிக்கு பழி வாங்காது மன்னித்தார்கள். உலகில் வேறொருவரின் சரித்திரமும் இதுபோல் வரையப்படவில்லை.
இந்த விண்ணுலகும் மண்ணுலகும் நிலைத்து நிற்கும் காலமெல்லாம் நபி அவர்கள் மீது ஸலாமும் ஸலவாத்தும் உண்டாகுமாக.
(பி கு) எழுத்து பிழை ஏதேனும் இருப்பின் மன்னித்துவிடுங்கள்.
No comments:
Post a Comment