Pages

Saturday, 14 November 2020

தீபாவளி தமிழர்களின் பண்டிகையா?

 தீபாவளி தமிழர்களின் பண்டிகையா?

தீபாவளி தமிழர்களின் திருநாள் தான். இந்த பண்டிகையை ஜெயனர்கள் மகாவீரர் முக்தி அடைந்த நாளாக கொண்டாடுகிறர்கள்.

இறந்த ஒருவரின் நினைவாகத்தான் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. எண்ணைக்குளியல், மாமிசம் உண்பது இறப்புக்கு பிறகு வரும் கசப்பு தலையை நினைவுபடுத்துகிறது. இனிப்பு சாப்பிடுவது இறந்தவரின் அந்த இழப்பு மகிழ்ச்சியை தருகிறது என்பதை குறிக்கிறது.

அப்படி யார் இறந்ததை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நரகாசுரனையா ?நரகாசுரன் கதை என்பது ஆரிய யூத பிராமணர்கள் சொல்லிய ஒரு புராண கட்டுக்கதை. இதைப்போல பல கட்டுக் கதைகளை அவர்கள் புனைந்து மக்களை நம்ப வைத்து இருக்கிறார்கள்.

இந்தக்கதையில் அசுரன் ஒருவன் பூமியை கடலுக்குள் மறைத்து வைத்து விடுவானாம். கடலே பூமியில் தான் இருக்கிறது இதில் எங்கே பூமியை கடலுக்கு அடியில் மறைத்து வைப்பது. சிந்திக்கத் தெரிந்த யாரும் இந்த கதையை நம்ப மாட்டார்கள்.

தமிழர்களின் ஆதி சமயம் ஆதி மெய்யியல் ஆசீவகம். ஆசீவகத் துறவிகள் தான் சமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஜெயின சமயத்திற்கும் இந்த சமணர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

சமணர்கள் தமிழர்கள் தமிழ் இலக்கியங்களை உருவாக்கிய சித்தர்கள்.சித்தர்களும் சமணர்களும் ஒருவரே.

சித்தர்+ அண்ணன்+ வாசல் ஆன சித்தன்னவாசலில் சமணம் ஓவியங்கள் இருப்பதே இதற்கு சான்று.

மற்களி என்பவர் ஒரு ஆசீவக தமிழ் துறவி. இவர் காலத்தில்தான் மகாவீரன் ,புத்தர் எல்லாம் வாழ்ந்தார்கள். இவருடைய அறிவாற்றல் வளர்ச்சி பிடிக்காமல் இவரை நயவஞ்சகமாக உணவில் விஷம் வைத்து கொன்று விடுகிறார் மகாவீரர். இதனால் ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பையும் பெற்று விடுகிறான் மகாவீரர் என்று அழைக்கப்படும் வர்த்தமானன்.

மகாவீரன் இறந்த செய்தியைக் கேட்ட தமிழர்கள் அதை ஒரு கொண்டாட்ட விழாவாக மாற்றி விடுகிறார்கள் அந்த விழா தான் தீபாவளி.

ஆரியர்களும், ஜெயின சமயத்தினரும் கூட்டாளிகள். அவர்கள் இருவரும் சேர்ந்து தான் தமிழ் வரலாற்றை அழித்தனர்.

ஜெயனர்கள் தங்கள் சமயத்தில் 24 தீர்த்தங்கரர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் சமயத்தை கடைசியாக வந்த மகாவீரர் தான் தோற்றுவித்தார் என்கிறார்கள். அது எப்படி ஒரு சமயத்தை கடைசியாக வந்த தீர்த்தங்கரர் தோற்றுவிப்பார் அப்போது முதல் 23 தீர்த்தங்கரர்கள் எந்த சமயத்தில் இருந்தார்கள்.

இவர்கள் தமிழர் வரலாற்றை தான் இப்படி சிதைத்து இருக்கிறார்கள்.உண்மையில் தீர்வு தந்த கரர்கள் அதாவது தீர்வு தந்த கரங்களை கொண்டவர்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இது தூய தமிழ் வார்த்தை.நிர்வாண நிலை அடைந்த துறவிகளை அமணர்கள் ( அம்மண நிலை அடைந்ததால் )என்று அழைக்கப்பட்டார்கள். பின் அதுவே சமணர்கள் என்று மாறியது எப்படி அவை சபை ஆக மாறியதோ அதுபோல். ரிஷபம் என்றால் மாடு ,மாட்டை வாகனமாக கொண்டவர் சிவன் இவர்கள் சிவனை தான் ரிஷப நாதர் ஆதிநாதர் என்கிறார்கள்.

தமிழர் வரலாறும் சிவனில் இருந்து தான் தொடங்குகிறது ஓகக் கலையை கண்டுபிடித்தவர் என்பதால் ஆதியோகி என்று நாம் சிவனை அழைக்கிறோம். சிவனை தான் இவர்கள் ரிஷப நாதர் என்று முதல் தீர்த்தங்கரர் என்றும் சொல்கிறார்கள்.

ஜெயினர்களின் 23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் அவர் வேறு யாரும் இல்லை நம் தமிழ் கடவுள் பெருமாள் ஆகிய விஷ்ணு தான்.

தமிழர்களின் வரலாற்றை அழித்து விட்டு அதை தந்திரமாக தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஜைனர்கள். இவற்றையெல்லாம் தமிழர்கள் என்று உணர்வார்கள் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment