ஜெருசலேம்: ( ரத்தத்தால் குளித்த யுத்த பூமி.)
இந்த நகரம் யூதேய மலைப்பகுதியில் , மத்திய தரைக்கடலுக்கும் , சாக்கடலின் வடக்கு கரைக்கும் இடையே அமைந்துள்ளது.
உலக கிறிஸ்தவர்களை . இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய இடம் எது? என்றால் கண்ணைத் திறந்து ஒரு முறையாவது ஜெருசலேம் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும், பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்.
முஸ்லிம்களுக்கும் குறிப்பாக பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு??? எங்களது உயிரைப் புதைத்து வைத்திருக்கும் புண்ணியஸ்தலமே.!!. என் ஜெருசலேமே!!..என்று கனவிலும் பிதற்றிக் கொள்ளும்..நிராசையே வாழ்வாகிப் போன மக்கள்.
யூதர்களுக்கு இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட , தாங்கள் வாக்கப்பட்ட பூமி ஜெருசலேம். அதனை உள்ளடக்கிய இஸ்ரேல்..1,50,000 யூத சமாதிகள் நிறைந்த இடம்.
கல்லறைகள் மயமான மயானம்.
கிறிஸ்தவர்களுக்கு இயேசு பிறந்து , இறந்து , மீண்டும் உயிர்த்தெழுந்து , விண்ணகம் சென்ற இடம்.
ஆப்ரஹாமிய வம்சம் :
இம்மூன்று இனங்களும் ஆப்ரஹாமின் வழித் தோன்றல்கள். மூவருக்கும், மூத்த பெற்றோர் மூதாதையர் ஆதாம் ஏவாள்.
ஆப்ரஹாமின் இரு மகன்களில் ஈசாக்கின் வழிவந்தோர் யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்கள். இரண்டாம் மனைவியின் மகன் இஸ்மாயீல் வழி வந்தோர் முஸ்லிம்கள். ( இஸ்மாயீல் ஈசாக்குக்கு 12 வயது மூத்தவர் )
ஆரம்ப காலத்தில் ஆப்ரஹாம் மெஸபெடோமியா ( ஈராக் ) பகுதியில் இருந்து குடும்பத்துடன் கானான் ( இஸ்ரேல் பாலஸ்தீனம் ஜோர்டான் இணைந்த பகுதிகள் ) வந்தடைந்ததாகச் சொல்லப்படுகின்றது.
இந்த இஸ்ரவேலர்களின் இரண்டாவது மன்னனான தாவீது , ஜெருசலேம் என்ற நகரம் உருவாக்க்கியதாக கூறப்படுகிறது. இந்த தாவீதின் மகன் சாலமோனால் ஜெருசலேமில் மிகப்பெரிய தேவாலயம் கட்டப்பட்டது. இஸ்ரவேலர்களுக்கு மோசஸ் மூலமாக வழங்கப்பட்ட தவ்ராத் ( தோரா )அதாவது மக்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகள் அடங்கிய பேழையும் , மோசஸின் மந்திர கைத்தடியும் இங்கு வைக்கப்பட்டிருந்து.
யூத குல நாயகன் இயேசு அவதரித்த பெத்லகேம், சிறுவயதில் சுற்றித்திரிந்த நாசரேத் , இளைஞராக இருந்த போது அவர் பிரார்த்தனை செய்த இடம் இந்த சாலமோன் தேவாலயம். அவரை சிலுவையில் அறைந்த கல்வாரி மலை இதன் அருகாமையில் உள்ளது. அவர் உயிர்த்தெழுந்த தாக கூறப்படும் இடமான Holy sepulchre இங்கே தான் உள்ளது.
நபிகள் வானகம் சென்று திரும்பிய இடம் :
முகமது நபி மெக்காவில் இருந்து இறைத்தூதரால் ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டு, இறைவனிடம் பத்து கட்டளைகளை வாங்கிக் கொண்டு , மீண்டும் ஜெருசலேமில் ஓய்வெடுத்த பின் மீண்டும் மெக்கா சென்றதாக கூறப்படுகிறது. நபிகள் வந்து இறங்கிய குன்று Dome of the Rock என்ற இடமும் , அதையொட்டிய பள்ளிவாசலும் சேர்ந்து அல் அக்சா என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தான் தங்களுக்காக இறைவனால் மூசா ( மோசஸ் ) விடம் வழங்கப்பட்ட கட்டளைகளும் , அவரது மந்திர கைத்தடியும் வைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
கோவில்கள் நிறைந்த புண்ணிய ஸ்தலம்:
ரோமானியர்களது ஆட்சியின்போது சாலமோன் தேவாலயம் உடைக்கப்பட்டு, ஒற்றைச் சுவர் மட்டுமே எஞ்சி நிற்கிறது. யூதர்கள் வழிபாடு செய்யும் மிகப் புனிதமான தலம் அதுதான். .அதாவது ஜெருசலேம் தான்.
( மிஞ்சிய ஒற்றைச் சுவர் )
நபிகள் நாயகம் தனது மக்களை ஜெருசலேம் நோக்கி தொழுங்கள் என்று தான் கூறியிருந்தார். எனவே யூதர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என உலகின் பெரும்பான்மை இன மக்களின் புனித இடம் இந்த ஜெருசலேம்.
இந்த இடத்தை தங்களுக்கு உரிமையாக்க நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நடந்த போரில் பல லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ( சிலுவைப்போர் ). புனித நகரமான ஜெருசலேம் ரத்தத்தால் குளித்து பல முறை கூந்தலை முடிந்து கொண்டது.
இந்த மூன்று இனமும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை மூவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் தங்களது தந்தையகமான இஸ்ரேலைப் பிரிப்பதில் , சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட பங்காளிச் சண்டையில் , ஜெருசலேமே முக்கிய வேராக இருப்பதால் , ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் வந்தது.
ஜெருசலேம் அமைப்பு :
ஜெருசலேம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி கிழக்கு ஜெருசலேம். இப்பகுதி ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான பரப்பளவு உள்ளது.இது யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி பெரிய மதில் சுவரும், அதற்கான எட்டு வாயில்களும் உள்ளது.
இது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு , கிறிஸ்தவ , யூத , இஸ்லாமிய மற்றும் ஆர்மீனிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. மூவருக்கும் பொதுவான Temple Rock. உள்ளது. இதுவே ஆப்ரஹாம் தனது மகனை பலி கொடுக்கச் சென்ற இடமாக கருதப்படுகிறது. சாலமோன் தேவாலயம் அமைந்திருந்த இடமும் ( ஒற்றைச் சுவர் ) இங்கே இருந்ததாக யூதர்கள் கூறுகின்றனர்.
ஏசுவின் சிலுவை மைப் பாதுகாத்து வந்தவர்களது வாரிசுகள், இங்கே சுற்றுலா வழிகாட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது குடியிருப்பில் தான் கிறிஸ்து கொல்லப்பட்ட இடமான Holy sepulchre உள்ளது.
இயேசு விண்ணகம் சென்ற பகுதி.
இயேசு கிறிஸ்து நடந்து சென்ற பாதை.
இப்படியே நீண்டு கொண்டே போகிறது.. இம்மூன்று இன மக்களும் வாழ்நாளில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்..
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ரங்கம் அருணாசலா அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment