Pages

Tuesday, 17 November 2020

எப்படி ஆகாயத்தில் ஓசோன் படலம் ஏற்படுகிறது?



ஓசோன் என்பது உயிர்வளி(oxygen) மூலக்கூறு.

இவை புவியின் மேல்வளிமண்டலத்தில் போர்வை போல் போர்த்தியிருக்கின்றன. அதனால், ஓசோன் படலம் என்கிறோம்.

பொதுவாக, கதிரொளிகளும், அண்டவெளிக் கதிர்களும் நம் புவியை தாக்கிய வண்ணம் இருக்கின்றன. இவை பூமியிலுள்ள உயிர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியவை.

இயற்கை கருணை மிகுந்தது. அதனால் தான், பூமிக்கு காந்தப்புலத்தை வழங்கியிருக்கிறது. இப்புலம் நம்மைக் காக்கிறது. அதேபோல், ஓசோன் இக்கதிர்களுடன் வினைபுரிந்து வெவ்வேறு மூலக்கூறுகளாக சிதையும். ஆனால், ஓசோன் உருவாக்கமும், சிதைவும் சமநிலையிலே இருந்தன.

நாம் பயன்படுத்தக் கூடிய கரியமில வாயுக்களும், பைங்குடில் வாயுக்களும் ஒசோன் படலத்தின் அடர்த்தியையும், பரப்பையும். குறைத்துவிட்டன. இதனால் மேற்சொன்ன சமநிலையும் குலைந்துபோனது.

உண்மையில் ஓட்டை என்று இல்லை. ஓசோன் படலத்தின் பரப்பளவு , குறைந்திருப்பதையே ஓட்டை என்கிறோம்.



No comments:

Post a Comment