Pages

Thursday, 12 November 2020

புகழ்பெற்ற சாஞ்சியிலுள்ள அசோகர் தூண்

 அசோகர் தூண்கள் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் என்னென்ன?

  • அசோகரின் தூண்கள் என்பன இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் மௌரிய அரசரான அசோகரால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூண்களை குறிக்கும்.
  • முதலில் பல்வேறு தூண்கள் இருந்துள்ளன.
  • தற்போது 19 தூண்கள் மட்டுமே உள்ளன.
  • அதில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • அசோகர் தூணில் நான்கு சிங்கங்கள் உள்ளன.
  • அவை
    • ஆற்றல்
    • துணிவு
    • வலிமை
    • பெருமை ஆகியவற்றைக் குறிக்கின்றன.
  • இந்த தூணில் காளை, குதிரை, யானை, சிங்கம் ஆகிய நான்கு உயிரினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு தூணும் 40–50 அடி உயரமும், தலா 50 டன் எடையும் உடையவை.
  • இவற்றுள் ஒருசில சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட மைல் தொலைவில் செதுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.
  • இந்த தூண்களில் பெரும்பாலும் அசோகர் கால நீதியைப் பற்றி பொறிக்கப்பட்டுள்ளன.
  • முதல் தூணானது 16ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

புகழ்பெற்ற சாஞ்சியிலுள்ள அசோகர் தூண்

No comments:

Post a Comment