சாமி - என்ற சொல்லின் நேரடிப் பொருள் - உடைமைக்கு சொந்தக்காரர்.
அனைத்து படைப்புகளுக்கும் இறைவனே உடையவர் என்ற காரணத்தையொட்டி அமைந்த பெயர் இது.
பெருவுடையார் என்பதே தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானின் பெயராகும். (இன்றைய வழக்கில் பெரியசாமி)
வடமொழியில் 'ஸ்வாமி /ஸ்வாமின்' என்ற சொல்லிற்கு - சொந்தக்காரன், உடையவன், உரிமையாளன், தலைவன் என்று பொருள்.
(பிற்காலத்தில் கணவன், அரசன், குரு, தெய்வச் சிலை என்றும் நீட்சிப்பொருள் கூறுகின்றனர்) .
ஸ்வாமி - என்ற இச்சொல் எங்ஙனம் தமிழிலிருந்து உருப்பெற்றது என முதலில் பார்ப்போம்.
- சும் - என்ற அடிச்சொல் திரட்சிப் பொருள் குறித்தது .
- சும்மை = தொகுதி, கூட்டம், சேர்ப்பு (சேர்ப்பது) .
- சும் > சொம் = செல்வத்தொகுதி, செல்வச் சேர்க்கை (பழந்தமிழில் சொம் என்றாலே சொத்துதான்).
- சும் > சொம் = சொத்து ( Property) .
- முதுசொம் = பூர்வீகச் சொத்து.
- சொம் + து = சொந்து > சொந்தம் = தன்னொடு சேர்ந்தது /கூடியது, உறவால் இணைந்தது.
- சொம்பு - திரண்ட வடிவம் கொண்ட பாத்திரம்.
சொம் - என்ற சொத்தைக் குறித்த தமிழ்ச்சொல்லின் திரிபே... வடமொழியில் 'ஸ்வாம்' என்றானது எனத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
சொம் > ஸ்வம் > ஸ்வாம்.
வடமொழியிலும் 'ஸ்வாம்' என்றால் சொத்து .
தேவஸ்வாம் - என்றால் தெய்வச் சொத்து, கோயில் சொத்து. ( Property of God).
(Devaswom boards in Kerala - Wikipedia) .
ஸ்வாம் > ஸ்வாமி > ஸ்வாமின் - என்றால் சொத்துக்காரன், உரிமையாளன், உடையவன், ஆண்டவன், தெய்வம்.
ஸ்வாமி - என்ற சொல் மீண்டும் தமிழுக்குத் திரும்பிய போது 'சாமி' ஆனது.
தஞ்சைப் பெருவுடையார், திருச்சிற்றம்பலமுடையார் , திருவேங்கடமுடையார், திருநாகேச்சுரமுடையார் என 'உடையார்' என்ற பெயரில்தான் தெய்வங்கள் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன - என்பதையும் நோக்குக.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment