டார்வின் மனிதன் உருவான விதியும், விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ஒரே கருத்தை சொல்கிறதா? எப்படி?
என்னுடைய கருத்து சில பேருக்கு பிடிக்கும் பல பேருக்கு பிடிக்காது.
டார்வினின் பரிணாம வளர்ச்சியும் விஷ்ணுவின் பத்து அவதாரத்தையும் ஒப்பிட்டு பார்க்க போரோம்.
கமலஹாசனின் தசவதாரம் படமும் இதையே உணர்த்துகிறது
டார்வினின் பரிணாம வளர்ச்சி மற்றும் விஷ்ணு அவதாரங்கள்
டார்வின் கப்பலில் பல நாட்களில் பல கண்டங்களை சுற்றி பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நிறுவினார்.
விஷ்ணுவின் அவதாரங்கள் பத்தையும், அவை டார்வின் கோட்பாட்டோடு எப்படி ஒத்துப் போகிறது என்பதையும் பார்ப்போம்.
1. மச்ச அவதாரம்: மச்ச என்றால் மீன் என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு. அப்படியே தான் விஷ்ணு முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது.
2. கூர்ம அவதாரம்: ‘கூர்மம்’ என்றால் ‘ஆமை’ என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழும் உயிரினம் நீர், நிலம் இரண்டிலும் வாழும் உயிரினமாக மாற்றம் அடையும் என்று உள்ளது. எனவே நீர், நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது.
3. வராக அவதாரம்: ‘வராகம்’ என்றால் ‘பன்றி’ என்று பொருள். பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை ஒரு காலக் கட்டத்தில் முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள்.
4. நரசிம்ம அவதாரம்: நரனாகிய மனிதனும், சிம்மம் ஆகிய மிருகமும் சேர்ந்த கலவை நரசிம்மம். நில வாழ்பவைகளாக இருந்த விலங்கினம் பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையாக சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.
5. வாமன அவதாரம்: பாதி மனிதன், பாதி மிருகம் என்ற நிலையைத் தாண்டி முழு மனிதனாக மாறுவது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. இதில் மனிதன் முழு வளர்ச்சி அடைந்து விடாத குள்ள உருவமாக வாமனர் காட்சி அளிக்கிறார்.
6. பரசுராம அவதாரம்: ஆதிமனிதன் மிருகங்களையும் எதிரிகளையும் மூர்க்கமாகத் தாக்கி தன் சக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. தசாவதாரத்தின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தில் திருமால் மிகவும் மூர்க்க மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளார். கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்.
7. ராம அவதாரம்: காட்டிலும், நாட்டிலுமாக மாறி மாறி வசித்தது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. ராவணனைக் கொல்ல திருமால் எடுத்த ராமாவதாரத்தில் ராமர் அப்படியே காட்டிலும், நாட்டிலும் வாழ்ந்து வருகிறார். இந்த அவதாரத்தில் அறிவு கூர்மைக்கும், அசாத்திய பலத்திற்கும் பெயர் போன அனுமன் என்ற முக்கிய கதாபாத்திரம் மூலம் குரங்கினத்தின் அபார வளர்ச்சியும் சுட்டிக் காட்டப்படுகிறது.
(நீர் வாழ்வன, நீர்நிலம் வாழ்வன, நிலம் வாழ்வன, மிருகம் மனிதன் கலந்த இனம் என்று படிப்படியாய் தசாவதாரப் பரிணாம வளர்ச்சியில் அடுத்ததாக முழு மனிதன் என்று காட்டப்பட்டாலும், டார்வினின் குரங்கின் அபார வளர்ச்சி பின் மனிதனாக முடிந்தது என்னும் கோட்பாடு வேறு விதத்தில் ராமாவதாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் மனிதனான ராமனுக்கு இணையாகவும் உதவியாகவும் நடந்து கொள்ளும் சுக்ரீவன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களில் குரங்கினங்களின் மிக உயர்ந்த நிலை வெளிப்படுகிறது.)
8. பலராம அவதாரம்: காட்டை முழுமையாக விட்டுவிட்டு நாட்டில் வாழ ஆரம்பித்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமர் விவசாயம் செய்வதைக் குறிக்கும் விதத்தில் கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.
9. கிருஷ்ண அவதாரம்: விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் மேய்த்து வாழும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டம். மனிதனின் உணர்வின் உயர்வுகள் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அலசப்படவில்லை என்றாலும் தசாவதாரத்தில் இந்த உயர்வுகள் துல்லியமாய் வளர்ச்சி அடைவதும் காட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
10. கல்கி அவதாரம்: மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஒரு முடிவு இல்லை. கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது.
ஆயுதங்களும், வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி, தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். மேலைநாட்டு அறிஞர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது வியப்பானதல்லவா .
இந்த பதிவுகளை வாங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
No comments:
Post a Comment