ஏன் நாய் என பெயர் வந்தது?
ஞால் - என்ற சொல் 'தொங்கு' என்ற வினையைக் குறித்தது.
- ஞால்> ஞாலம் - என்றால் தொங்கும் உலகம். (ஞாலம் - தமிழ் விக்சனரி)
- ஞாலுதல் - நாலுதல் = தொங்குதல்.
(தூக்கு போட்டு தொங்கி இறப்பதை... நாண்டுகிட்டு செத்துப் போவதாகச் சொல்லும் வழக்கை நோக்குக) . - ஞால் > நால் > நா என தொங்கும் நாக்கைக் குறிக்கும்.. நா > நாவு > நாக்கு.
Tongue - நாக்கைக் குறித்த ஆங்கிலச்சொல்லும் 'தொங்கு' என்ற இத்தமிழ்ச் சொல்லின் திரிபே!
தொங்கு > TONGUE.
- ஞால்> ஞாள் > ஞாளி.ஞாளி - என்பது நாயைக் குறித்த பழந்தமிழ்ச் சொல்..
- நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு திரியும் குணத்தையொட்டி ' ஞாளி' என்னும் பெயர் தமிழில் தோன்றியது.
நாளி | அகராதி | Tamil Dictionary
- ஞாளி > நாளி > நாயி ( நாஇ) > நாய் என்ற தற்காலப்பெயரானது.
நாய், நாஇ, பைரவன், ஞமலி, ஞாளி, ஞிமிறு, கூரன், குக்கல், குக்கன், அக்கன், அலிபகம், குரைமுகன், எகினம், எகினன், சுனகன், சுவானம், சாரமேயன், சகுடம், உரோகதி இவை நாயைக் குறிக்கும் பிற சொற்களாம்.
- ஞள் - என்ற குறிப்பொலியிலிருந்து ஞள்ளை > ஞாளி எனத் தோன்றியிருக்கலாம் என்ற கருத்துமுண்டு.
( பட்டி என்றால் ஆடுமாடுகள் கட்டும் இடம். அதை காவல் காக்கும் நாய் - பட்டி நாய். இதுவே மலையாளத்தில் நாயைக் குறித்த இழிசொல்லானது. ) .
ஞகர வரிசை எழத்துகள் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வருகையில் ஞகரம் நகரமாக ஒலிப்பது இலக்கணப்போலி ஆகும்.
உதாரணம் :ஞாயிறு >< நாயிறு, ஞண்டு >< நண்டு, ஞாடு >< நாடு, ஞேயம் >< நேயம்
ஞாண் >< நாண், ஞிமிர் >< நிமிர், ஞெகிழ் >< நெகிழ்.
No comments:
Post a Comment