நாம் வாழும் இந்த வையகத்திற்கு உலகம் , புவி, பூமி, ஞாலம் என பல்வேறு பெயர்கள் தமிழில் உண்டு.
உல் - என்ற மூலச்சொல்லிலிருந்து உருவான சொல்லே உலகம்.
* உல் - உலா= சுற்றிவருதல்.
* உல் - உல - உலவு - உலாவு.
* உலவுதல் = வளைதல், வட்டமாதல்,சுற்றுதல், திரிதல்.
* உலவு - உலகு = உருண்டையாயிருப்பது. சுற்றிவருவது.
* உல் +து = உத்து - உற்று - சுற்று.
* உழல் - சுழல் ( அகரம் சகரமாகத் திரிவது போல, உகரம் சுகரமாகத் திரியும்).
* உழலுதல் - சுழலுதல் = அலைதல், சுற்றுதல்.
இந்த உலகமானது ஏறத்தாழ 500கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கதிரவனிலிருந்து வெடித்துச் சிதறிய தீப்பிழம்பாகும். இதுவே பின்னர் குளிர்ந்து இறுகி உருண்டை வடிவத்தில் உலகமானது.
சுழற்சி விசையின் காரணமாக நீள்வட்டப் பாதையில் கதிரவனைச் சுற்றிச் சுழலும் பண்பின் அடிப்படையில் இடப்பட்ட பெயரே உலகம் ஆகும்
உலகம் - என்ற சொல் திரிந்து வடமொழியில் 'லோக' ஆனது.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment