Pages

Thursday, 12 November 2020

அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


அங்கோர்வாட்

  • அங்கோர் வாட் என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு கோவிலாகும்.
  • இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்.
  • இது இரண்டாம் சூரியவர்மன் என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் கட்டப்பட்டது.
  • இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
  • திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள்.
  • இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.
  • 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
  • இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.
  • கம்போடியாவின் முக்கிய வருவாயே இக்கோவிலை நம்பித்தான் என்றும் கூறுவர்.
  • இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர்.
  • இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம்.
  • இந்த கோவில் எவ்வளவு பெரியது எனில் பூமியிலிருந்து 20,000 மீ உயரம் மேலே சென்று படம்பிடித்தால்தான் இதை முழுமையாக படம்பிடிக்க முடியும். (அவ்வளவு பெரியது)
  • இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது.
  • முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
  • இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
  • மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.
  • மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.
  • கெமர், தமிழ்க் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
  • இரண்டாம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் ஒரு சிவன் , விஷ்ணு கோயிலாகத் தான் கட்டினார்.
  • சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.
  • 1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.
  • உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.
  • இன்றளவும் வியந்து பார்க்க வைக்கும் சிற்பங்கள், கட்டிடத் திறமையை காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளதால் தான் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய இடமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment