நவகுஞ்சரம்(Navagunjara)
இந்துக்களின் வீரகாவியம் என்று போற்றப்படும் மகாபாரதத்தில் இடம் பிடித்த ஓர் கற்பனையான உயிரினம்தான் இந்த நவகுஞ்சரம்.
இந்த கற்பனை உயிரியை பறவை என்று அழைப்பதா இல்லை விலங்கு என்று அழைப்பதா என்பதில் குழப்பமே....
ஏனெனில் கற்பனை கலந்த இந்த விசித்திர உயிரினம் தன்னகத்தே 9 வெவ்வேறு வகையான உயிரினங்களின் பாகத்தை அடக்கியுள்ளது. நவ என்றால் 9ஐ குறிக்கும் இதனாலையே நவகுஞ்சரம் என்று பெயர் பெற்றிருக்கலாம். எனினும் இதன் கற்பனை உருவம் பறவையின் உடல் அமைப்பை ஒத்துள்ளதால் பறவை என்றே அழைக்கின்றனர்.
படத்தை தேடி கொடுத்தமைக்கு நன்றி:கூகுள்
சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள் மற்றும் மனிதனின் கையுடன் கூடிய உருவம் ஒன்று மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது அல்லவா.... இந்த கற்பனை விலங்கிற்கு பெயர் தான் நவகுஞ்சரம்.
சரி... இந்த கற்பனைப் பிராணிக்கு உயிர் குடுத்தவர்தான் ஒரிய மொழி கவிஞரான சரளதாசர். இவர் தான் எழுதிய மகாபாரதத்தின் ஒரிய மொழி பதிப்பில் சிறு அங்கம் வகிப்பவைதான் இந்த நவகுஞ்சர விலங்கு. மற்ற மொழியில் இருக்கும் மகாபாரத காவியத்தில் இந்த விலங்கு இடம்பெறாதது ஆச்சரியமாகவே உள்ளது....
அவ்வாறு சரளதாசரால் சித்தரிக்கப்பட்ட நவகுஞ்சரம் பறவை மகாபாரத கதையில் இடம்பெறும் காரணத்தை பார்ப்போம்.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவராகிய அர்ஜுனன் மலைமீது அமையாதியான இடத்தில் இறைவனை வேண்டி தவம் செய்கிறார்.
அச்சமயத்தில் கண்ணன் நவகுஞ்சரம் விலங்காக மாறி அர்ஜுனன் முன் தோன்றி தவத்தை கலைக்கிறார்.
சற்றும் சிந்திக்காத அர்ஜுனன் வந்திருப்பது கண்ணன் என்று தெரியாமல் தன் வில்லை கையில் எடுத்து அந்த விலங்கின் மீது குறிவைக்கிறான்.
உடனே அந்த விலங்கின் கையில் தாமரை பூ இருப்பதை கண்ட அர்ஜுனன். சற்று யோசனை செய்தான். இவ்வுயிரியிடம் இருந்து தமக்கு எத்தீங்கும் ஏற்படாத போது பிறகு ஏன் இதனை நான் கொல்ல துணிந்தேன் என்று நினைத்தபடி கையில் இருந்த வில்லை கீழே போட்டான்.
பிறகு அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
'மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. ஆனால் உலகமோ எல்லையற்றது'
என்பதை உணர்ந்த அர்ஜுனன் இதுவரைபார்த்திராத ஓர் உயிரி இந்த உலகில் இருக்கலாம் என்று நினைத்தார். பிறகு தன்னை சோதிப்பதற்காக இந்த 9 விலங்குகளின் பாகத்தை கொண்ட விசித்திர உயிரியாக கிருஷ்ணன் அவதாரம் எடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு. கீழே மண்டியிட்டு சிரம் தாழ்த்தி வணங்கினார்.
படம் உதவிக்கு நன்றி: கூகுள்
ஆக நான் மேலே மேற்கோள் காட்டியுள்ள கிருஷ்ணரின் உபதேசத்தை அர்ஜுனனுக்கு நினைவுபடுத்தவே கிருஷ்ணரின் அவதாரமாக சரளதாசர் நவகுஞ்சரம் பறவையை கவிஞர் ஒரிய மொழி மகாபாரதத்தில் உருவகபடுத்தியுள்ளார்.
- மேலும் ஒடிசாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
படம் உதவிக்கு நன்றி: கூகுள்.
இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ளதுதான் கஞ்சிபா (Ganjipa) சீட்டுக்கட்டு.
- ஒடிசாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் ஓவியர்களால் வரையப்படுகிறது.
- மேலும் இந்த நவகுஞ்சரத்தை அர்ஜுனன் வழிபடும் காட்சியானது ஒடிசாவின் புகழ்பெற்ற வழிபாட்டு தளமான பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் சிற்பமாக இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment