Pages

Saturday, 14 November 2020

இராணுவமே இல்லாத நாடுகள்

 இராணுவமே இல்லாத நாடுகள் எத்தனை உள்ளன? எதற்காக அங்கு இராணுவம் தேவைப்படவில்லை !!!

ஒரு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இராணுவம் இன்றியமையாத படை.

ஆனால் உலகில் இராணுவமே இல்லாத நாடுகளும் சில உள்ளன.

அந்த நாடுகளுக்கு அருகில் உள்ள சில நாடுகள் தமது இராணுவத்தை வழங்கி பாதுகாப்பு அம்சங்களுக்காக உதவுகின்றன.

அந்த வகையில் இராணுவமே இல்லாத நாடுகளும் அவற்றின் பாதுகாப்புக்காக அவற்றுக்கு உதவும் ஒருசில நாடுகள் & பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி காண்போம்.

1.அண்டோரா (Andorra)

  • இந்த நாடானது தமது பாதுகாப்புக்காக ஸ்பெயின் & பிரான்ஸ் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்நாட்டுக்கு துணை இராணுவ பாதுகாப்புப் படை இருந்தாலும் அதுவும் அந்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாகவே செயல்படுவதால் இதற்கான இராணுவ பாதுகாப்பை மேற்கண்ட நாடுகள் பெற்றுள்ளன.

2. டொமினிகா (Dominica)

  • இந்த நாட்டுக்கு கடந்த 1981 ம் ஆண்டு முதல் இராணுவப் படை இல்லை.
  • உள்நாட்டு பாதுகாப்புப் படையே (நம்ம காவல்துறை மாதிரி) இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.

3.கிரினாடா (Grenada)

  • இந்நாட்டுக்கும் கடந்த 1981 முதல் உள்நாட்டு காவல் படையே நாட்டின் காவல் பொறுப்பையும் கண்காணித்து வருகிறது.

4.கிரிபாட்டி (Kribati)

  • இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்த நாட்டின் காவல் படையே இதன் தேசிய அளவிலான பாதுகாப்புக்கும் பொறுப்பு.
  • இந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆஸ்திரேலியா & நியூசிலாந்து ஆகிய நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.

5.லீக்டன்ஸ்டைன்

  • இராணுவத்துக்கான செலவு அதிகம் ஏற்படுவதால் இந்நாட்டின் இராணுவம் 1868ல் நீக்கப்பட்டது.
  • எனினும் போர் தொடர்பான சூழ்நிலைகளில் தற்காலிகமாக ஏற்படுத்த வழிவகை உண்டு. இருந்தாலும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
  • இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பையும் ஆஸ்திரேலியா & நியுசிலாந்து ஆகிய நாடுகளே ஏற்றுள்ளன.
  • இந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.
  • இந்தியாவுடன் ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கொண்டாடும் 4 நாடுகளுள் இதுவும் ஒன்று.

6.மார்ஷல் தீவுகள்

  • நாடு உருவானதிலிருந்து கடலோரக் காவல்படையுடன் ஒருங்கிணைந்த உள்நாட்டுக் காவல்படையே எல்லைப் பகுதியையும் காக்க பொறுப்பேற்றுள்ளது.
  • இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்காவும் ஏற்றுள்ளது.

7.மைக்ரோனேசியா

  • இந்நாட்டுக்கான பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுள்ளது.

8.நவ்ரு

  • இந்நாட்டுக்கான பாதுகாப்புப் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது.
  • இந்நாட்டுக்கு உள்நாட்டு காவல் பொறுப்பை அந்நாடே (நவ்ருவே) ஏற்றுள்ளது.

9.பலாவு

  • 30 நபர்களுடைய உள்நாட்டு காவல் படையே நாட்டின் பாதுகாப்புக்கும் அனுமதிக்கிறது.
  • அமெரிக்கா இதனுடனான ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு வழங்குகிறது.

10.செயிண்ட் லூசியா

  • Special Service Unit, Coast Guard ஆகிய அமைப்புகள் இந்நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளன.

11.செயிண்ட் வின்செண்ட் & கிரினாடின்ஸ்

  • 94 நபர்களைக் கொண்ட 2 துணை இராணுவப் படைகள் உள்ளன.
  1. Special Service Unit
  2. Coast Guard
  • இதனுடன் உள்நாட்டு காவல்படை இதன் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

12.சமோவா

  • நாடு உருவானதிலிருந்து இதற்கு இராணுவம் உருவாக்கப்படவில்லை.
  • சிறிய காவல் படை & கடலோர காவல்படை இதற்கான பாதுகாப்பை ஏற்றுள்ளன.
  • நியுசிலாந்தும் இதன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளனது.

13.சாலமன் தீவுகள்

  • இன் ரீதியான பிரச்சினை ஏற்படும் வரை இராணுவம் இருந்தது.
  • பிரச்சினையை ஆஸ்திரேலியா & நியுசிலாந்து நாடுகளின் தலையீட்டால் உள்நாட்டு பிரிச்சினை முடிவுக்கு வந்தது.
  • உள்நாட்டு காவல் துறை அமைப்புகளே நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளன.

14.துவாலு

  • நாடு உருவானதிலிருந்து இராணுவம் ஏற்படுத்தப்படவில்லை.
  • கடலோர காவல்படை மே நாட்டின் பாத்துகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

15.வாடிகன் சிட்டி

  • இந்நாட்டின் Gendarmerie படையே இதன் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.
  • இத்தாலி நாட்டின் பாதுகாப்புப் படை இதன் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது.
  • இதன் பாதுகாப்புப் படை 1970ல் நீக்கப்பட்டது.


இதுபோல் தமிழ்நாட்டிற்கு துணை நிற்க வேண்டிய இந்தியா ஏன் தமிழ்நாட்டை பாதுகாக்கவில்லை.
நான் கூறுவதை பற்றி தமிழர்களாகிய அனைவருக்கும் புரியும்.
உதாரணமாக ,
கேரளா , கர்நாடகா , ஆந்திரா , தமிழ்நாடு போன்ற திராவிட நாடுகளாக இருந்த பொழுது அண்டை துணை கண்டமாக விளங்கும் இலங்கை நாடும் தமிழர்களுக்கு எதிராக இல்லை !!!
திராவிட நாடுகளில் இருந்து பிரிந்து , தமிழர்களுக்காக தனி நாடாக நிற்கும் பொழுது மட்டும் ஏன் இந்த இனவெறி உணர்வு இருக்கிறது இந்த இலங்கைக்கும் , இந்தியாவுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள இராமஸ்வரம் , கன்னியாக்குமரி  மீனவ மக்களை அன்னிய இராணுவமான இலங்கை கடற்படையோ அல்லது இராணுவமோ ஏன் தமிழர்களை எதிரியாக நினைக்கிறது.அதற்கு ஏன் இந்திய அரசும் துணையாக நிற்கிறது.அத்துமீறி நடக்கும் இனவெறிக்கு ஏன் இந்திய அரசு பொறுப்பு ஏற்க மறுக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலங்களுக்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மட்டும் இனவெறி , மொழிவெறி , மனவெறி என அனைத்தும் நிகழும் பொழுது ஏன் இந்திய அரசு கைக்கட்டி நிற்கிறது.
அன்றை பிரதமர் திரு.ராஜீவ்காந்தியின் மரணத்தை வைத்தே பல அரசியலும் , சூழ்ச்சியும் வைத்து முன்விரோதமாக செயல்படுகிறது இந்தியா. 

உலகில் தமிழ்நாட்டை காட்டிலும் சிறிய நாடுகளும் பல இராணுவத்தை அமைந்திருக்கிறது. அந்த சிறிய நாடுகளும் தனிநாடாக திகழ்கிறது.
உதாரணமாக மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகள் முதலில் ஒரே நாடாகவே இருந்து கருத்து முரண்பாட்டில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டு தனி தனி தனிநாடாக உதயமானது.அதுபோல் தமிழநாட்டிற்கு தனி இராணுவம் அமைப்பது தவறு இல்லை அல்லவா !!!! 

உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் , மக்களுக்கும் இல்லாத பெருமைக்குரிய நாடாகவும் , பெருமிதம் கொள்ளும் அளவிற்கு வரலாறு , தொல்லியல் , தொன்மையில் தலை சிறந்த மக்களாகவும் விளங்கும் தமிழர்கள்.
உலகில் முதன் முதலில் தோன்றிய மனித இனம் தமிழர் என்ற பெருமையும் , 
தமிழர்களாகிய இலெமூரியா என்னும் குமரிக்கண்டத்தின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு உலக அளவில் சிறந்த அந்தஸ்து என்னும் தராதரம் மிக்கது தமிழ்நாடு. 

ஏன் தனி நாடாக உதயமாக கூடாது.
தமிழ்நாட்டை வைத்தே பல அரசியல் நடக்கிறது.
இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழ்வது தமிழ்நாடே .
கல்வியல் , பொருளியல் , வாழ்வியல் , தொல்லியல் ஆகிய அனைத்திலும் முதன்மை மிக்கது தமிழ்நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தமிழ்நாடு தன்னை தானே காத்துக்கொள்ள இராணுவம் அமைத்தாலும்  , மக்களுக்கு பாதுகாப்புக்கு நல்லது என்பது உண்மை.
இவ்வாறு கூற காரணம் இந்தியாவில் தென்திசையில் உள்ள எல்லையாகவும் , சமுத்திரத்தின் எல்லையாகவும்  இருப்பது தமிழ்நாடே... கடலோர எல்லை பிரச்சினையில் இருந்து விடப்படும். 
இந்தியா தமிழ்நாட்டின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து பொறுப்பை இழந்ததால் , தமிழ்நாடு இன்று அல்ல ஒருநாள் தனிநாடாக உதயமாகி , தனி இராணுவம் அமைக்கும் என்பது வரலாற்று கணிப்பு.

                            தமிழால் இணைவோம் !!!
                              அறிவால் உயர்வோம் !!!
                                     தமிழ் வாழ்க !!!
                 அறிவியலின் தேடல் தொடரும்.
                                   வலியே  " வலிமை "
                            - அய்யனார் (வால்வரின்)..





No comments:

Post a Comment