ஆசிவகம் என்றால் என்ன? அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததா? அல்லது அடிப்படையற்ற கற்பனையா? நடுநிலை விளக்கம் தேவை.
ஆசீவகம் என்றொரு சமயம் இருந்ததற்கான பல சான்றுகள் உண்டு. அவற்றினைப் பார்ப்போம்.
- அசோகர் காலக் கல்வெட்டுச் சான்று- அசோகரின் பவுத்த தம்மங்கள் பற்றிய கல்வெட்டுச் செய்தி ஒன்றில் `ஆசீவகம்` {Ajivikas}பற்றிய குறிப்பு உண்டு. (1)
- பிற மொழி நூல்கள்- அசோகவதனம் (Ashokavadana / Narrative of Ashoka) என்ற பவுத்த மொழி நூலில் `ஆசீவகம் பற்றிய குறிப்பு உண்டு (2). இலங்கையினைச் சேர்ந்த மகாவம்சமானது தேவநம்பியதிசனின் பாட்டனான பாண்டுகாபயன் ஆசீவர்களுக்கான உறைவிடம் ஒன்றினைக் கட்டிக் கொடுத்ததாகக் கூறுகின்றது (3).
தமிழ் இலக்கியங்கள்:
3. சிலம்பு
4.மணிமேகலை
`சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை` எனும் பகுதியிலுள்ள அறுவகைச் சமயங்களில் ஒன்றாக ஆசீவகம் சொல்லப்படுகின்றது.
`எல்லையில் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பில் அறிவன்` { சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை110-112 )}
5.நீலகேசி
நீலகேசியின் `ஆசீவகவாதச் சருக்கம்` என்றொரு பகுதியே உண்டு. (4)
6. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, பெரியபுராணம் எனச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய நூல்கள்:-
1.Ajivikas a vanished indian religion by Arthur Llewellyn Basham
2. ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - பேரா.நெடுஞ்செழியன்
குறிப்புகள்:-
1.Glasenapp, Helmuth Von (1999), Jainism, Motilal Banarsidass, ISBN 978-81-208-1376-2, Page. 43
2. John S. Strong (1989). The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna
3. தெரிந்தும் தெரியாத தமிழ்- இலங்கையில் ஆசீவகம்-பக்கம் 58.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய
தோழர் திரு.இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment