Pages

Friday, 27 November 2020

வலது, இடது என்ற சொற்கள் எப்படி வந்தது?


வலம் - என்றால் வலிமை, வெற்றி.
இடம் - என்றால் தோல்வி, துன்பம்.

இங்ஙனம் வெற்றி, தோல்வி குறித்தமைந்த பெயர்களே வலக்கை, இடக்கை குறித்த சொற்களாக மாறின.

வலக்கை - என்றாலே வெற்றி தரும் கை என்றுதான் பொருள். வலக்கை - என்றால் வலிய கை / வலுவான கை, பயிற்சியினால் வலிமைபெற்ற கை.

* வல் - வலம் = வலிமை, வெற்றி.
* வலம் - வலவன் = திறமையுடையவன்; வெற்றியாளன்; தேர்ப்பாகன்.
வலவன் - தமிழ் விக்சனரி.
* கோயிலையோ, நகரையோ சுற்றிவருதலை வலம் வருதல் என்று கூறுவதுண்டு.

அடுத்து... இடக்கை என்ற சொல் எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.
தமிழ் மொழியில் வேர்ச்சொல் அடிப்படையில் இ - என்பது பின்னிடம் குறிப்பதாகும்.

  • இழு (இழுத்தல்) = பின்னுக்குக்கொண்டு வா.
  • இடறு = பின்விழத் தடுக்கு.
  • இடம் = தோல்வி.
  • இடர் = துன்பம்.
  • இடை = பின்னடைவு , தோற்றோடுதல்.(இடையறாத = தொய்வற்ற, தோல்வியற்ற, தொடர்ச்சியான).
  • இடைஞ்சல் = பிற் செலுத்தும் தடை.
  • இடையூறு = தடங்கல்.
  • இறை = தண்ணீரை இழுத்தல் , பின்னுக்குத் தெறிக்கச் செய்தல்.

இடக்கை = தோற்றக்கை.
வலக்கை வலிமைபெற்றதாகவும், இடக்கை வலுவற்றதாகவுமே கருதப்படுகிறது. இன்றைக்கும் சிலர் கொச்சையான வழக்கில் 'தோத்தாங்கை' எனக் கூறுவதைக் காணலாம்.

இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!

             தமிழால் இணைவோம் !!!
              அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
       அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment