போற்றி - என்றால் போல இருப்பது.
கல் > கற்றல், நில் > நிற்றல்
வில் > விற்றல், நூல் > நூற்றல் எனச் சொற்கள் அமைந்த அதே வழியில்...
போல் > போற்றல் என உண்டான சொல்.
போல் = போல இருப்பது = மற்றொன்றுடன் ஒப்பிட்டுச் சொல்வது.
போல் > போற்றல் > போற்றி!
ஆண்டவனுடைய அருமை பெருமைகளையும் குணஞ் செயல்களையும் பதிகம் மற்றும் பாடல்களால் உயர்வாக 'ஒப்புமை செய்து' போற்றுதலே போற்றி எனப்படும்.
கதிரவனாய் சொலித்தாய் போற்றி!
கார்முகில் வண்ணனே போற்றி!
வானாய் உயர்ந்து நின்றாய் போற்றி!
மலர்ப்பாதம் கொண்டாய் போற்றி!
... எனப் பெரும்பாலும் உவம உருபுகளால் ஒப்பிட்டு போற்றுவதாகவே இருப்பதைக் காணலாம்.
ஒப்பிட்டு உவமைப்படுத்தும் பொருள் தரும் போல - என்ற உவம உருபு லிருந்து தோன்றியதே 'போற்றி' - என்ற பதம் ஆகும்.
(போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே... போன்றவையே உவம உருபுகள் எனப்படும்) .
இங்ஙனம் போல - என்ற சொல்லிலிருந்து உருவான போற்றி... பிற்காலத்தில்தான் உயர்வுக்கருத்தைக் குறித்த சொல்லாக நிலைபெற்றது.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment