பொருள் தரும் நூல்களில் வரலாற்று அடிப்படையில் மூத்த நூல் எது.
தாய், தமையன். தமக்கை, தம்பி, தங்கை, தமர், தந்தை ஆகிய சொற்கள் எந்த வழிமுறையில் பிறந்ததோ , அதே வழிமுறையில் அமைக்கப்பட்டதே “தமிழ்” என்ற சொல்லும். (தம் என்பது படர்க்கையைக் குறிப்பது).
தம் + ஆய் = தாய்.
தம் + ஐயன் = தமையன்.
தம் + அக்கை = தமக்கை.
தம் + கை = தங்கை.
அதே போல...
தம் + மொழி = தமிழ் ஆனது.
தம் + மொழி = தம்மொழி > தமிழி > தமிழ் என்று நிலைத்தது.
மொழிதல் - என்றால் சொல்லுதல் / பேசுதல் எனப் பொருள்படும்.
(உதா: வழி மொழிதல்).
✔மொழற்றல் > மிழற்றல் = குழந்தை போல மென்மையாக - இனிமையாகப் பேசுதல்.
"மழவுங் குழவும் இளமைப் பொருள்"
என்கிறது தொல்காப்பியம். (இளமை மென்மையையும் உணர்த்தும்).
* மழ - மழல் - மழலை;
* மழல் - மழறு - மழற்று - மிழற்று.
✔மிழ் - என்பதை பொதுவாக ஒலி / ஓசை குறித்த சொல்லாக பல பயன்பாட்டில் காணமுடியும்.
* மிழலை > மழலை = (குழந்தை போல் ) குளறிப் பேசுதல்.
* மிழ்த்துதல் > மீட்டுதல் (வீணை மீட்டு தல் / கம்பிகளை சுண்டிவிட்டு உண்டாகும் ஓசை).
* சிமிழ்க்கை > சீழ்க்கை (Whistle)
நாக்கை மடித்துச்செய்யும் ஒலி.
எங்கேயோ படித்தது !
* இமிழ் = இனிய ஒலி (sweetest sound).
* உமிழ் = காறி உமிழ்தல் “த்தூ”.
* அமிழ் = அம் + மிழ் - அழகான ஓசை.
* நிமிழ் = அதிக அதிர்வெண் ஒலி ( high frequency sound).
* சிமிழ் = குறை இடைவெளியில் தொடர்ந்து ஒலிப்பது - சிமிக்கி மணி போல.
* குமிழ் = short pop sound of a bubble.
* தமிழ் = தண் + மிழ் - Cool sound.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment