Pages

Tuesday, 10 November 2020

திருக்குறள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது .

 திருக்குறள் என்று ஒன்று இருந்ததை எப்படி கண்டுபிடித்தார்கள்? யார் யார் அதனை தொகுத்தவர்கள்? இப்போது அந்த ஓலைச்சுவடிகள் எங்கு உள்ளன?



தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களைப் போலவே, நம்மை ஆள்வதற்காக ஆங்கிலேயர் அனுப்பிய எல்லிஸ் துரை எனும் கவர்னர், சென்னைக்கு வந்து, தமிழ் கற்று, தமிழில் செய்யுள் எழுதும் அளவிற்குத் திறன் பெற்றதோடு நில்லாது, பழங்காலத் தமிழ்ச் சுவடிகளை எல்லாம் சேகரித்து நூலாக்குவதிலும் ஈடுபட்டார்.

அவரது நண்பரான மதுரை கவர்னர் ஆரிங்டன் துரையிடம் சமையல்காரராகப் பணிபுரிந்தவர் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார், கந்தசாமி என்பவர்), தன்னிடம் அடுப்பெரிக்க வந்த பல ஓலைச்சுவடிகளை ஆரிங்டன் துரையிடம் கொடுக்க, அவர் அவற்றை எல்லிஸ் துரையிடம் கொடுக்க, அவையே திருக்குறள் சுவடிகள் என்று பின்பு அறியப்பட்டன. திருக்குறள், நாலடியார், திருவள்ளுவமாலை ஆகிய மூன்றும் அவ்வாறு 1812ல் நூலாகி வெளிவந்தபோது, அதே கால கட்டத்தில், தஞ்சையில் ஞானப்பிரகாசர் என்பவர் மூலமாகவும் திருக்குறள் முதன்முறையாக வெளிவந்தது. (இப்போது அவை ஏதாவது ஓர் அருங்காட்சியகத்தில் இருக்கலாம்.)

இந்த எல்லிசு துரை திருக்குறளின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழிபெயர்த்தார். திருவள்ளுவருக்கென (தாடியில்லாத உருவில்) காசு அச்சடித்து வெளியிட்டார். அவர் பெயரில் மதுரையில் எல்லிஸ் நகரும், சென்னையில் எல்லிஸ் சாலையும் உள்ளன.


No comments:

Post a Comment