புடைவை - என்பது தூய தமிழ்ச்சொல்.
புடவை - என்பது பேச்சு வழக்கு.
புடைவை > புடவை. ( ஐகாரம் > அகரம்)
புடை - என்றால் 'சுற்று’ என்று பொருள்.
புடைவை - உடல் முழுவதும் சுற்றிக் கட்டப்படுவதால்' புடைவை' ஆனது.
எந்த விதமான இணைப்புகளும் தேவைப்படாத - உடலைச் சுற்றிக் கட்டுகின்ற - தைக்கப்படாத ஆடைகளையே பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உடுத்தி வந்தனர். அவை இன்றைக்கும் தொடர்ந்து பயனில் இருப்பதற்கு புடைவையும் ஒரு சான்று.
புடை சூழ வலம் வந்தார் அரசர்- என்றால் அமைச்சர்கள், படைவீரர்கள், பிற பரிவாரங்கள் அரணாகச் சுற்றி வர, நடுநாயகமாக அரசன் வந்தார் எனப் பொருள்.
சேலை மற்றும் சீலை, பொருள் வித்தியாசம் என்ன?
நான் முதன்முதலில் புடவை கட்டிய கதை உங்களுக்குத் தெரியுமா? முதல் தடவை புடவை கட்டிய அனுபவம் எவ்வாறு இருந்தது ? கேள்விக்கு இரவீந்திரன் சிவன் (Ravindran S)-இன் பதில்
சொல்லுக்கிடையில் ஐகாரம் அகரமாகக் குறுகுவது இயல்பான விதிகளில் ஒன்று.
முரைசு > முரசு.
தமையன் > தமயன்
அரைசன் > அரசன்
உடைமை > உடமை.
தகைமை > தகமை
பழைமை > பழமை.
புழைக்கடை > புழக்கடை
அடைமானம் > அடமானம்.
அரைப்பு > அரப்பு
குழைவி > குழவி
அள்ளைக்கை > அள்ளக்கை
பாலைக்காடு > பாலக்காடு.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.ரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
No comments:
Post a Comment