கலிபோர்ணிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த George L. Hart எனும் அறிஞர்"ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடே செம்மொழி (Classical language) எனும் தகுதியாகும்" என்கின்றார் . ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படத் தேவையான பண்புகளைப் பார்ப்பதற்கு முன், உலகில் எந்தந்த மொழிகள் செம்மொழிகளாக மதிக்கப்படுகின்றன எனப் பார்ப்போம்.
தமிழ்
கிரேக்கம்
இலத்தீன்
அரபு மொழி
சீனம்
ஹீப்ரூ
சமற்கிருதம்.
பாரசீகம்
ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த பழமையைப் பறைச்சாற்ற இலக்கிய படைப்புகளும், கலைகளும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அம்மொழி செம்மொழி பண்பைப் பெறும்.
ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படுவதற்கு 11 தகமைகள் தேவை என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். அவையாவன வருமாறு.
1. பழமையானது- Antiquity
2. தனித்தன்மையானது- Individuality
3. பொதுவான பண்புகள்- Common characters
4. நடுநிலையானது- Neutrality
5. பெற்றோர் உறவு- Parental kinship
6. கலை & பண்பாடு- Culture & Art
7. மொழியின் விடுதலைத்தன்மை (சுதந்திரம்)- Independence
8. இலக்கியப்பழமை- Literary prowess
9. சிறந்த சிந்தனைகள்/சிறந்த எண்ணங்கள்- Noble ideas
10. தனித்தியங்கும் தன்மை- Acting independently
11. மொழியியல் கொள்கைகள்- lingustics policies
மேற்கூறிய தகமைகளில் ஆகக்குறைந்தது ஏழு/எட்டு தகமைகளைக் கொண்டிருந்தாலே ஒரு மொழி செம்மொழியாகும். “நம்ம மொழி மட்டுமே உலகில் இந்தப் பதினொரு தகமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது “ என கார்வட் தமிழிருக்கையின் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது {Source : Harvard Tamil chair Inc }. இவ்வாறு ஒரு மொழி செம்மொழியாகத் தகுதியடைவதற்கான எல்லாத் தகமைகளையும் கொண்ட உலகின் ஒரேயொரு வாழும் மொழியாக எமது மொழி திகழ்வது உண்மையிலேயே நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்றல்லவா!
தமிழ் செம்மொழி தகுதியினைப் பெற்றதால் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அதனை ஏற்கும். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு, தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். இது போன்ற எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். செம்மொழிகள் பல இருந்தாலும், அம் மொழிகளிலுள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களை இன்றும் அதே மொழியில் படித்துணரக் கூடிய ஒரே மொழி- நம்ம மொழி, `தமிழ் மொழி` மட்டுமேயாகும்.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழரும் , தமிழ் பற்றாளன் திரு.இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
No comments:
Post a Comment