திருச்சிற்றம்பலம் என்பதற்கு பொருள் என்ன? விளக்கம் தாருங்கள்.
உஷ்
சிதம்பர ரகசியம்.
கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை
நம்ம இஸ்லாமிய சகோதரர்கள் கூறிக் கொள்ளும்
அஸ்லாம் அலைக்கும்
அலைக்கும் அஸ்லாம் போல்
சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேலையில்
திருச்சிற்றம்பலம் என்று ஒருவர் கூறினால்
தில்லையம்பலம் என மற்றவர் மறுமொழி கூறுவர்.
இந்த வழக்கு அம்பலத்துக்கு வந்த காலம் போய்
பி.சிதம்பரம் ஐயா வழக்கு என்னாச்சு ன்னு வழக்கமாகி ஊர் வம்பே நமதாகி வாழும் காலமாய்
நம்மை கொரோனா கொரட்டையற்ற நித்திய நித்திரை செய்ய வைக்கிறது.
இந்த நேரத்தில் இப்படிக் கேள்வி
திருச்சிற்றம்பலம்!!!
சரி சின்னதா சிதம்பரம் கோவில் ஒரு சுற்று வருவோமா!
நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம்
சிறு இடைவெளி அதாவது சிற்று அம்பலம்.
நம்ம இதயத்தில் கட்டைவிரல் சைசுக்கு gap இருப்பதாக நம் வேதம் சொல்கிறது.( Cardiologist இது குறித்து. விளக்கினால் tally பண்ணலாம்)
அந்த இடம் இறைவன் கூத்தாடும் இடமாக்கி இறைவன் நம்மை அந்த சிறு இடைவெளி வழியே ஆத்ம ஞானம் கொடுப்பதே சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது அகம் பிரம்மா.நான் நானே கடவுள் என்பதாக கூற்று.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்பது சிவவாக்கியர் கூற்று.
நம்ம வசனம் திருச்சிற்றம்பலம் என்று இல்லாது
எங்கிட்டேயவா? என எக்கேடு கெட்டு போறோமோ!
ஆகவேதான் அந்த காலத்தில்
சிறு இடைவெளி அம்பலத்தான் ஆடும் இடமெங்கே
என ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடத்தில்
திருச்சிற்றம்பலம் என்றும்
அந்த இடத்தில் ஆடும் ஈசனை (நடராஜன்)அகக் கண்ணால் கண்டு மகிழ
தில்லையம்பலம் என்று கூறி நம்மை எல்லாம் சிவமயம் என வாழ வைத்தனர்.
மறந்ததை மாற்றி மாண்பது கொள்வோம்
திரு கோபால் நடராஜன் கீழ்வரும் ஆன்மீக செய்தி சேர்த்துள்ளார். நல்ல பதிவு. அன்னாருக்கு நன்றி
திருச்சிற்றம்பலம. இதற்கும் மேலாக திருமூலர் நெற்றிக்கு நேரே புருவத்து இடைவளி, உற்றுற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம், பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடும், சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே!!! என்பதை கொண்டு புருவ நடுவே சிற்றம்பலம் என்றும் சிறப்புக்குறியதாய் திரு சேர்ந்து, திருச்சிற்றம்பலம் என்றாயிற்று.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment