Pages

Monday, 16 November 2020

மற்ற விலங்குகளில் காணப்படாத எந்த குணங்கள் கழுதையிடம் உள்ளன

நாம் தேவையில்லாமல் கழுதைகளுக்கு கெட்ட பெயரைக் கொடுக்கிறோமா?

ஆம். கழுதையை பற்றி சில விபரங்கள். இதை படித்த பின் கழுதயைப் பற்றிய அபிப்பிராயம் கண்டிப்பாக மாறிவிடும்.

ஒரு தடவை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றால் 25 ஆண்டுகளுக்கு பின்பும் அதன் ஞாபகத்தில் இருக்கும். அதுபோல தன் இனத்தவரையும்.

ஆபத்து இருப்பதாக கருதும் வேலையில் ஈடுபடாது.

நல்ல முறையில் வளர்த்தால் 40 ஆண்டுகள் உயிர் வாழும்.

கூட்டமாக வாழ விரும்பும். தன் இனம் இல்லை என்றால் ஆட்டு மந்தையுடன் கூட வாழும்.

எந்தவித தரை அமைப்பிலும் குதிரையை விட நன்கு செல்லும்.

இயற்கையில் இவை பாலைவன மிருகம். அம்மாதிரி இடங்களில் உயிர்வாழ முடியும்.

பெரிய காதுகளை உடைய இவை 60 மைல் தூரத்திலிருந்து கத்தும் கழுதை குரலைகூட கேட்கும். மிகுந்த சூடான நேரத்திலும் பாலைவன சூழ்நிலையில் காதுகள் உடம்பை குளிர்ந்த நிலையில் வைக்க உதவும்.

குதிரைகளைவிட அதிக சுயசிந்தனை உள்ளவை, குறிப்பாக தன்னை பாதுகாத்துக் கொள்ள முடிவு எடுப்பதில். ஆபத்தை உணர்ந்தால் ஒரு அடி கூட மேலே எடுத்து வைக்காது. நாம் இதை அழிச்சாட்டியம், சண்டித்தனம் என்கிறோம். அப்படியல்ல.

தங்களுக்குள் வலிமையானதை தலைவனாக ஏற்றுக் கொள்ளும்.

மழையில் நிற்க விரும்பாது. அதன் உடல் நலத்திற்கும் அது கேடு விளைவிக்கும்.

தனிமையில் விடப்பட்டால் மன அழுத்தத்தில் மூழ்கி விடும். மனித அல்லது ஆடு துணை தேவை.

மந்தையை நன்கு பாதுகாக்கும். தேவைப்பட்டால் சிங்கம் புலியை கூட எதிர்த்து நிற்கும்.

வலிமை அதிகம் வாய்ந்தது.

குதிரை கழுதை சேர்க்கையால் உண்டாவது ம்யூல் எனப்படும் மலைபிரதேச பிராணி. நிறைய எடை தூக்கி மலைபிரதேசங்களில் செல்ல முடியும். இதனால் இராணுவத்தில் இவை உபயோகப்படுத்த படுகின்றன.

இவ்வளவு சிறப்புகள் கொண்டது கழுதை. நாம் தான் இலேசாக எடை போட்டு விடுகிறோம்.

(இது நான் கீழ்க்கண்ட ஆங்கில கோராவில் எழுதிய பதிலின் தமிழாக்கம்.

Rajagopalan Jagadeesan (ராஜகோபாலன்)'s answer to What are the qualities of a donkey that are not found in other animals? Are donkeys being unfairly maligned?)


No comments:

Post a Comment