அப்படி தமிழில் உருவாகியது என்றால் அதன் வேர் சொற்கள் என்ன?
இது ஒரு வடநாட்டுப் பண்டிகை என்றாலும், ஒரு வடநாட்டவராவது ஒழுங்காக ‘தீபாவளி’ என உச்சரித்து நான் கேட்டதில்லை; ‘திவாலி’ என்பான். திவாலி என்னும் சொல், பொருளனைத்தும் இழந்து சல்லிக் காசு இல்லாமல் ஓட்டாண்டியாகிவிட்டதைத் தான் குறிக்கும். ஒருவேளை, பட்டாசு வெடித்து, கண்ட இனிப்புகளைக் கடையில் வாங்கி, காசைக் கரியாக்குவதை, சூசகமாகத் தெரிவிக்கின்றனரோ என்னவோ யார் கண்டது?
இப்போது வினாவில் உள்ள சரியான சொல்லான தீபாவளி என்பதன் பொருளுக்கு வருவோம்.
தீ+பா+வளி
தீ- ஒளிரும் நெருப்பு
பா- பாட்டு
வளி- காற்று
காற்றின் துணையில், ஒளிரும் நெருப்பு, பாக்கள் யாத்தது போன்ற ஒழுங்கில். இவ்வாறு விளக்குகளுடன் கொண்டாடும் விழா! இது தான் இச்சொல்லின் தமிழ் விளக்கம்.
தீப+ஆவளி
தீப- விளக்கு
ஆவளி- வரிசை
விளக்கு வரிசை. விளக்குகளுடன் கொண்டாடும் விழா. இதுதான் வடவர் மொழியில், இச்சொல்லின், விளக்கம்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment