Pages

Thursday, 12 November 2020

'ஏகன்', 'அனேகன்' போன்ற பட பெயர்கள் திருவாசகத்தில் இருந்து எடுக்கப்பட்டது போலிருக்கிறது. இப்படி வேறு இலக்கியப் பாடல்களில் இருந்து படங்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டிருக்கிறதா? அவை என்னென்ன? பட்டியலிட முடியுமா?


வாரணம் ஆயிரம் −நாச்சியார் திருமொழி.

காக்க காக்க − கந்த சஷ்டி கவசம்.

கனகவேல் காக்க−கந்த சஷ்டி கவசம்.

காக்கைச் சிறகினிலே−பாரதியார் கவிதைகள் (தோத்திரப் பாடல்கள்).

அச்சமில்லை அச்சமில்லை− பாரதியார் கவிதைகள் (பண்டாரப் பாட்டு).

யாதுமாகி −பாரதியார் கவிதைகள் (தோத்திரப் பாடல்கள்).

தீர்த்தக் கரையினிலே − பாரதியார் கவிதைகள் (கண்ணன் பாட்டு).

மனதில் உறுதி வேண்டும்− பாரதியார் கவிதைகள் (ஞானப் பாடல்கள்).

வல்லமை தாராயோ− பாரதியார் கவிதைகள் (தோத்திரப் பாடல்கள்).

கனா கண்டேன் −நாச்சியார் திருமொழி.

மோகனப் புன்னகை −பாரதியார் கவிதைகள்.

சிவசக்தி −பாரதியார் கவிதைகள்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் −பாரதியார் கவிதைகள்.

நந்தலாலா− பாரதியார் கவிதைகள்.

ரௌத்திரம் −பாரதியார் ஆத்திச்சூடி.

சங்கே முழங்கு −பாரதிதாசன் கவிதைகள்.

அன்பே சிவம் −திருமந்திரம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை− பாரதியார் கவிதைகள்.

உத்தமன் − திருப்பாவை.

அன்னையும் பிதாவும் −கொன்றை வேந்தன்.

அண்ணாமலை − திருஞான சம்பந்தர் தேவாரம்.

சக்தி −பாரதியார் கவிதைகள்.

இன்று போய் நாளை வா−கம்பராமாயணம்.

தாயின் மணிக்கொடி − பாரதியார் கவிதைகள்.

ஆசைமுகம்−பாரதியார் கவிதைகள்.

திக்குத் தெரியாத காட்டில்−பாரதியார் கவிதைகள்.

கண்ணன் என் காதலன்−பாரதியார் கவிதைகள்( கண்ணன் பாட்டு).

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்− பாரதியார் கவிதைகள்.

அயன்−திருவாசகம் (திருச்சாழல் பதிகம்).

திரிசூலம்−திருநாவுக்கரசர் தேவாரம் (திருத்தாண்டகம்).

வில்லு−திருவாசகம் (திருவுந்தியார் பதிகம்).

ஒளிவிளக்கு−திருநாவுக்கரசர் தேவாரம்(திருத்தாண்டகம்).

அவன் அவள் அது−சிவஞான போதம்.

பாலும் தேனும்−பாரதிதாசன் கவிதைகள் ( காதல் கவிதைகள்).

வானம்பாடி −பாரதிதாசன் கவிதைகள் (காதல் கவிதைகள்).

அச்சம் தவிர்−பாரதியார் ஆத்திச்சூடி.

ஆண்மை தவறேல்− பாரதியார் ஆத்திச்சூடி.

நையப்புடை−பாரதியார் ஆத்திச்சூடி.

சூரரைப் போற்று−பாரதியார் ஆத்திச்சூடி.

கொஞ்சும் கிளி−பாரதிதாசன் (காதல்) கவிதைகள்.

மாடப்புறா−பாரதிதாசன் (காதல்) கவிதைகள்.

காற்று வெளியிடை−பாரதியார் கவிதைகள்.

காலா−பாரதியார் கவிதைகள்.

சூது கவ்வும்−பாரதியார் கவிதைகள்( பாஞ்சாலி சபதம்).

No comments:

Post a Comment