Pages

Friday, 27 November 2020

கடல் பாசிகள் பற்றிய சுவாரசிய விஷயங்கள் என்ன?


  1. மரங்கள் உயிர்க் காற்றை (ஆக்ஸிஜன் ) வெளியிட்டு காற்றில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கின்றன. ஆனால் உலகில் உயிர்க் காற்றை (ஆக்ஸிஜன் ) வெளியிடுவதில் மரங்களைவிட அதிக பங்காற்றுபவை கடல் பாசிகள்.
  2. சிலவகை கடல்பாசிகள் மிகவும் சத்து நிறைந்தவை.
  3. எதிர்கால எரிபொருள் தயாரிப்பில் அதிகப் பங்காற்றப் போவது கடல்பாசிகள்

அண்மையில் செய்தித்தாளில் வந்த செய்தி

பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடல்பகுதியில் கிடைக்கும் கோரைக்குட்டம் வகை பாசிகளை சேகரித்து காயவைத்து பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். கடலில் சேகரிக்கப்படும் பாசிகளை கரைப்பகுதியில் உலர வைக்கின்றனர்.இந்த கடல் பாசிகள் பல வகைகள் உள்ளன. இதில் உணவு வகைகளான சாக்லெட், ஜெல்லி போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் ஒரு சில கடல்பாசி வகைகள் சாயப்பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில வகை கடல்பாசிகள் உரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரங்களுக்காக பயன்படுத்தப்படும் பாசியை ஒரு டன் காய வைத்தது 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் உணவு வகைகளுக்குபயன்படும் கடல் பாசிகள் பச்சையாக டன் 4 ஆயிரம் ரூபாய்க்கும் காயவைத்தது 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


No comments:

Post a Comment