Pages

Friday, 27 November 2020

தாரசுரதில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழன் கட்டியது

 

தாரசுரதில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழன் கட்டியது. உலக பிராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்ப்பட்டது.

யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தலங்கள் மூன்று

  • தஞ்சாவூர் பெரிய கோவில்,
  • கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்,
  • தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில்

தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில் இந்த மூன்றிலும் பிரம்மாண்டங்களின் உச்சம். விரல் அளவு இடத்தினுள் ஒரு கருத்தை பிரம்மாண்டமாக பதிய வைத்திருக்கும் சிலை வடிப்பாளனின் கலைநுணுக்கங்கள் உலகில் வேறு எங்கும் காணாதவை.

ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளை பார்த்து வாய்ப்பிளக்கும் இந்த தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை நம் மண்ணில் ஏராளம். பழமைகளை நாம் தான் பார்க்க தவறவிடுகிறோம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

நம் பெரும்பாட்டான்களின் கலைப்படைப்பை அனைவரும் கண்டு களிப்பீர். கோவிலின் படிகளில் ஸ்வரங்களை அமைந்துத்துள்ளான். நீங்கள் எம்மதத்தவராயினும் சென்று கண்டுகளியுங்கள். என் கண்களின் வழியே சில வகையில் படங்களை எடுத்துள்ளேன். அதை இத்துடன் இணைத்தும் உள்ளேன் காணுங்கள் சென்று அனுபவியுங்கள். 800 வருடம் பழமை மாறா கலை..

No comments:

Post a Comment