முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
புவியை அகழ்வு செய்து , ஆராய்ந்து கண்டறியா உண்மைகளை - தமிழ் மொழியை அகழ்வு செய்தே வெளிக்கொணர்ந்திட முடியும்.
பொன் , அதாவது தங்கமே மனிதன் கண்டறிந்த முதல்மாழையாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான மாழைகள் தாது வடிவில் கிடைப்பவை. ஆனால் தங்கம் ஒரு தனி உலோகமாகவே தாதுவிலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியமில்லாமல் இயற்கையாக , நேரடியாகவே கிடைக்கிறது. பெரும்பாலும் நிலத்தடியில், பாறைகளில் தனித்த நிலையிலேயே ரேகை போல படர்ந்திருக்கும்.( படத்தில் உள்ளதைப் போல…)
முதலில் மனிதன் இம்மாழையைக் கண்டுபிடித்த போது. .. கண்களைக் கவரும் பொலிவுடன் , மஞ்சளாக, சொலிக்கும் நிறத்தில் இருந்ததால்...பொலிவாக இருக்கும் தோற்றப் பண்பைக் குறிக்கும் வகையில் அதற்கு 'பொன்' எனப் பெயரிட்டான். (தகதகவென சொலிப்பதைக் கொண்டு பிற்காலத்தில் 'தங்கம்' என்றும் அழைத்தான்).
* பொலிவு - பொல் - பொன்.
முதலில் கண்டறிந்தது பொன் என்பதால் , பொன் என்ற சொல் தங்கத்தை மட்டுமல்லாமல் மாழைகளின் பொதுப்பெயராகவே கருதப்பட்டது. (ஐம்பொன் என்பது பொன், வெள்ளி, செம்பு, இரும்பு,ஈயம் ஆகியவற்றின் கலவையே ).
அதையடுத்து , தங்கத்தைப் போலவே தனிநிலையில் கிடைத்த சிவப்பு நிறமாழையை - செந்நிறப்பண்பைக் குறிக்கும் பொருட்டு.... செம்மை + பொன் = 'செம்பொன்' - என அழைத்தான். செம்பொன்னே பின்னர் செம்பு ஆனது.
செம்பொன் > செம்பு.
அதன் பின்னர் பல்வேறு பெரும் முயற்சிகளின் முடிவாக கண்டுபிடித்த - தாதிலிருந்து பிரித்தறிந்த - மாழையின் கரியநிறத்தைக் குறிக்கும் வகையில் அதற்கு இரும் + பொன் = இரும்பொன் எனப் பெயரிட்டான். (இர் - என்றால் கறுப்பு நிறம்). இரும்பொன்தான் பேச்சு வழக்கில் இரும்பு ஆனது.
இரும்பொன் > இரும்பு.
இரும்புத் தாது - தமிழ் விக்கிப்பீடியா.
ஆக...எனது ஊகப்படி பொன், செம்பொன், இரும்பொன், வெள்ளி, ஈயம் என்ற வரிசையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
துத்தநாகம், வெண்கலம்,பித்தளை, பாதரசம், கந்தகம், இங்குலியம் போன்றவை பின்னர் வந்தவை.
No comments:
Post a Comment