தமிழ்நாட்டில் முக்கியமான ஐந்து வட்டார வழக்கு மொழி உள்ளது எனலாம்.
- சென்னை.
- மதுரை.
- நெல்லை.
- கோயம்புத்தூர்.
- கன்னியாகுமரி.
இவைதவிர, புலம்பெயர் தமிழர்களின் ஈழத்தமிழ் மிக முக்கியமான வட்டார மொழி ஆகும்.
சிறு சிறு இனக்குழுக்களாக இருந்த மக்கள் குழுதான் சேர்ந்து ஒரு தேசிய இனமாக மாறுகிறது.
ஒரு தேசிய இனத்தின் முக்கிய அடையாளம் மொழி.
மொழியை, பொதுவான ஒரு தேசிய இனத்திற்கான மொழியாகத்தான் பார்க்க வேண்டும்.
தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் வட்டார வழக்கு மொழி உண்டு.
கேரளாவில் பேசப்படும் மலையாள மொழியில், தெற்கே செல்ல செல்ல பேச்சுவழக்கு உச்சரிப்பு முறை சற்று மாறுபடும்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் பேச்சு வழக்கு மொழி மாறுபடும்.
மகாராஷ்டிராவில் பேசுப்படும் இந்திக்கும் பீகார், உத்தரபிரதேசம் பேசப்படும் இந்திக்கும் வேறுபாடு உண்டு.
குஜாரத், ராஜஸ்தான் மாநிலங்களில் பேசப்படும் இந்திக்கும் வேறுபாடு உண்டு.
ஆங்கிலத்திலும் வட்டார வழக்கு மொழி உண்டு.
இங்கிலாந்து ஆங்கிலம் என்றும் அமெரிக்க ஆங்கிலம் என்றும் தனித்தனியாக உள்ளது.
அமெரிக்கர்கள், இங்கிலாந்தில் பேசப்படும் ஆங்கிலத்தை பற்றி அடிக்கடி கேலி செய்வார்கள்.
பொறுத்து பொறுத்து பார்த்த இங்கிலாந்து மக்கள், ஒரு கட்டத்தில் அமெரிக்கர்களுக்கு சூடாக பதிலளித்தனர் :
" ஆம். நாங்கள் பேசுவது ஆங்கிலம் அல்ல. இது எஙகள் இங்கிலாந்து மொழி"
என அமெரிக்கர்களின் மூக்கை உடைத்தனர்.
மற்ற மொழிகளில் உள்ள பேச்சு வழக்கு மொழியை பற்றி யாரும் சொல்வதில்லை. ஆனால், தமிழில் இருக்கும் பேச்சு வழக்கு மொழியை மட்டுமே பெரிதாக கருதுகின்றனர்.
No comments:
Post a Comment