Pages

Tuesday, 10 November 2020

சேரர், சோழர், பாண்டியர்களின் வரலாற்றில் ஏன் சோழர்கள் மட்டும் உலக முழுவது பிரபலமாக இருப்பதற்கு காரணம் !!!

 சேரர், சோழர், பாண்டியர்களின் வரலாற்றில் ஏன் சோழர்கள் மட்டும் உலக முழுவது பிரபலமாக இருப்பதற்கு காரணம்  !!! 



சேரர், சோழர், பாண்டியர் இவர்களை மூவேந்தர் என்று அழைப்பார்கள்.

  • சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர்.
  • சோழ அரசர்கள் தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியை ஆண்டுவந்தனர்.
  • பாண்டிய அரசர்கள் தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியை ஆண்டுவந்தனர்.

ஆக மூன்று அரசர்களும் தமிழ்நாட்டை ஆண்டுவந்துள்ளனர்.

  • கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம்.
  • சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.
  • இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

ஏன் சோழர்கள் மட்டும் மிகைப்படுத்திப் பேசப்படுகின்றனர்?.

  • சோழர்கள் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப்படுகைப் பகுதியில் தோற்றம் பெற்றது. கி.பி பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது.
  • கரிகால் சோழன், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். சோழ மன்னர்களில் தலைசிறந்தவராக போற்றப்படும் கரிகால சோழன், காவிரி ஆற்று நீர்ப் பெருக்கு திறம்பட பயன்படுத்தி பாசன வசதிகளை பெருக்கி பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகை செய்த பெருமைக்குரியவர் ஆவார்.
  • காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் உச்சத்தை எட்டிய பாசன நீர் மேலாண்மைக்கு கரிகாலச்சோழன் ஆட்சியில்தான் வித்திடப்பட்டது.
  • பாண்டியரையும் சேரரையும் ஏனைய குறுநில மன்னர்களையும் எதிர்த்து கரிகாலன் போரிட்டார். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது.
  • பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
  • சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனித சின்னங்களும் காணப்படுகின்றன.
  • இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. உலகம் முழுவதையும் சோழ ஆட்சியை கொடி நாட்ட பல போர்களை புரிந்தனர் சோழர்கள். சோழர்கள் உலகம் முழுவதையும் ஆண்ட வரலாறு ஆயிரம் , கிமு 1 ஆம்மற்றும் கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே சோழர்கள் ஆட்சி பிரபலமாக இருக்கிறது. சோழர்களின் படைப்பலம் பற்றி சீன தேசம் , கிரேக்கம் , எகிப்தி தேசம் , மங்கோலியா, கம்போடியா , சேதங்களில் உள்ள பல கல்வெட்டுகளில் சோழ பேரரசு பற்றிய தகவல்களை பல சான்றாக வழங்கி உள்ளார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று. 

சோழ மன்னர்கள் அணைகள், உழவு தொழில்களை மேம்படுத்தியுள்ளனர். இப்படி சோழர்களின் வரலாறு அனைத்திலும் செழிப்பாக இருந்ததால் சற்று மிகைபடுத்தி பேசப்படுகிறது.


No comments:

Post a Comment