பூமியை சுழற்ற எந்த சக்தி உதவுகிறது?
பல கோடி , கோடி டன் எடை உள்ள பூமி தன்னைத் தானே 1000 மைல் வேகத்தில் சுற்றவும் , மணிக்கு 66000 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வரவும் தொடர்ச்சியாக சக்தி எதுவும் தேவைப் படுவதில்லை என்பது ஆச்சரியமளிக்கலாம். நமது தினசரி வாழ்வின் அளவீடுகளும் , குறிப்பிட்ட வட்டத்துக்குள் அமைந்து விட்ட நமது சிந்தனைகளும் அண்டத்தின் உண்மைகளைப் புரிந்து கொள்வதை மிகவும் கடினமாக்குகின்றன.
பெரு வெடிப்புக் கொள்கையின் படி தற்போது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் , சூரியனும் , நட்சத்திரங்களும் ஒரே ஒரு மிகச் சிறிய புள்ளியாக இருந்ததாகவும் , அந்தப் புள்ளியே வெடித்துப் பலவாறாகச் சிதறி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நடசத்திரங்களாகவும் , சூரியனாகவும் , கிரகங்களாகவும் , மற்ற சிறு,சிறு விண் கற்களாகவும் இன்று உள்ளன . அந்த வெடிப்பினால் ஏற்பட்ட உந்து சக்தியால் பூமி தெறித்து ஓட முயல சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை ஓட விடாமல் தன்னை நோக்கி இழுக்க முயன்றது. இந்நிலையில் பூமிக்குப் பெரு வெடிப்பால் கிடைத்த விலகி ஓடும் சக்தியும் , சூரியனின் ஈர்ப்பு சக்தியும் சமமாக இருக்கவே , பூமியால் விலகி ஒடவோ , சூரியனால் பூமியை ஈர்த்து் தன்னோடு ஒட்ட வைத்துக் கொள்ளவோ இயலாமல் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
இந்நிலையை விளக்க ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு ஆள் ஒரு கன்றுக் குட்டியின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதைத் தனது வயலுக்குக் கூட்டிச் செல்கிறான். வழியில் திடீரென ஏதோ காரணத்தால் கன்று மிரண்டு வீட்டை நோக்கி ஓட முயல்கிறது. இப்போது அந்த ஆள் அதை ஓட விடாமல் வயலுக்கு இழுக்க முயல்கிறான். இருவரது பலமும் சமமாக இருக்கவே அவன் ஒரே இடத்தில் நின்று கொண்டு கன்றைக் கயிற்றின் மூலம் இழுக்க , கன்றுக் குட்டி கயிற்றை இழுத்தபடி அவனைச் சுற்றி வரும் நிலை ஏற்படலாம்.
கன்றுக் குட்டியின் பலம் பெரு வெடிப்பினால் பூமிக்குக் கிடைத்த பலம் என்றும் , கயிற்றின் மூலம் கன்றுக் குட்டியை இழுக்கம் மனிதனின் பவம் சூரியனின் ஈர்ப்பு விசை என்றும் வைத்துக் கொண்டால் பூமி சூரியனைச் சுற்றி வருவது எவ்வாறு என்பது விளங்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வர அதற்குத் தற்போது புதிதாக சக்தி எதுவும் தேவைப் படுவதில்லை பெரு வெடிப்பினால் கிடைத்த சக்தியினாலேயே அது இன்னும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.இவ்வாறு சுற்றி வரும் ஆற்றலைக் குறைக்கும் உராய்வு எதுவும் அண்டவெளியில் இல்லாததால் பூமி அதன் துவக்க சக்தி குறையாமல் தொடர்ந்து சுற்றி வருகிறது.
மொத்த விண்வெளியில் சுற்றி வரும் அனைத்துப் பொருட்களும் , விண் கற்கள் , வால் நட்சத்திரங்கள் உட்பட பெரு வெடிப்பினால் கிடைத்த சக்தியினாலேயே சுற்றி வருகின்றன.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment