வலம் - என்றால் வலிமை, வெற்றி.
இடம் - என்றால் தோல்வி, துன்பம்.
இங்ஙனம் வெற்றி, தோல்வி குறித்தமைந்த பெயர்களே வலக்கை, இடக்கை குறித்த சொற்களாக மாறின.
வலக்கை - என்றாலே வெற்றி தரும் கை என்றுதான் பொருள். வலக்கை - என்றால் வலிய கை / வலுவான கை, பயிற்சியினால் வலிமைபெற்ற கை.
* வல் - வலம் = வலிமை, வெற்றி.
* வலம் - வலவன் = திறமையுடையவன்; வெற்றியாளன்; தேர்ப்பாகன்.
வலவன் - தமிழ் விக்சனரி.
* கோயிலையோ, நகரையோ சுற்றிவருதலை வலம் வருதல் என்று கூறுவதுண்டு.
அடுத்து... இடக்கை என்ற சொல் எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.
தமிழ் மொழியில் வேர்ச்சொல் அடிப்படையில் இ - என்பது பின்னிடம் குறிப்பதாகும்.
- இழு (இழுத்தல்) = பின்னுக்குக்கொண்டு வா.
- இடறு = பின்விழத் தடுக்கு.
- இடம் = தோல்வி.
- இடர் = துன்பம்.
- இடை = பின்னடைவு , தோற்றோடுதல்.(இடையறாத = தொய்வற்ற, தோல்வியற்ற, தொடர்ச்சியான).
- இடைஞ்சல் = பிற் செலுத்தும் தடை.
- இடையூறு = தடங்கல்.
- இறை = தண்ணீரை இழுத்தல் , பின்னுக்குத் தெறிக்கச் செய்தல்.
இடக்கை = தோற்றக்கை.
வலக்கை வலிமைபெற்றதாகவும், இடக்கை வலுவற்றதாகவுமே கருதப்படுகிறது. இன்றைக்கும் சிலர் கொச்சையான வழக்கில் 'தோத்தாங்கை' எனக் கூறுவதைக் காணலாம்.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment