தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ,கிடைத்துள்ள தொல்பொருள் களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய தமிழ் மக்களின் நகரிய பண்பாட்டுக் காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இருந்து , கி.மு ஆறாம் நூற்றாண்டு வரை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மிகப்பெரிய செங்கல் கட்டுமானங்கள், மற்றும் அங்கு கிடைத்துள்ள தொல்பொருள் களின் சேர்மானம், அணிகலன்கள், கிடைத்துள்ள எலும்புத் துண்டுகள் , எழுத்துக்கள் போன்றவற்றிலிருந்து , தமிழர்களின் வாழ்வியல் முறை கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த பிரிய முறையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
காளை மாடு , பசு , ஆடுகள் போன்றவற்றின் எலும்புகள் மூலம் , விவசாயம் , கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்தது என்றும் , காட்டுப்பன்றி மற்றும் மான்களின் எலும்புகள் சிலவும் காணப்படுவதால் அவை உணவுக்காக வேட்டையாடப்பட்டு உணவாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்றும் அறிய முடிகிறது.
ஒரு விழுக்காடு மட்டுமே ஆய்ந்துள்ள நிலையில், மேற்கொண்டு நடைபெறப்போகும் ஆய்வுகள் மூலம் , மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று உறுதியாக கருதலாம்.
மேலும் சிந்து சமவெளியில் கிடைத்துள்ள எழுத்துருக்களுக்கும் , கீழடியில் கிடைத்துள்ள எழுத்துருக்களும் ஓரளவு ஒத்த எழுத்துக்களாக இருப்பதால், இவ்விரு இனக்குழுக்களுக்கும் அக்காலத்தில் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
கீழடி யில் கிடைத்துள்ள மட்கலன்களின் வெளிப்புற கழுத்துப் பகுதியில் ( தமிழி - பிராமி ) எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இவ்வெழுத்துக்களின் ஆழம் மற்றும் எழுத்தமைதி வேறுபட்டுக் காணப்படுவதால் பல்வேறு நபர்கள் தங்கள் பெயர்களை தாங்களே எழுதியிருக்க வேண்டும். கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓட்டில் ஒரே வரியில் ஆறு எழுத்துக்கள் கொண்ட தமிழி ( தமிழ் - பிராமி ) பொறிக்கப்பட்டுள்ளன.இவ்வெழுத்துக்கள் " கு வி ர ன் ஆ த் ' ஆகும்.இதில் விடுபட்டுள்ள எழுத்து ' ன் ' விடுதியாக இருக்கலாம். ஆகவே இது ஓர் ஆளின் பெயராக இருத்தல் வேண்டும். இந்த ஆட்பெயர் ' குவிரன் ஆதன் ' என்பதாகும்.
தமிழ்- பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலத் துண்டுகள்.
கிடைக்கப்பெற்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டவற்றின் தொகுப்பு.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.ரங்கன் அருணாசலா அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment