- மொழியியலில் பல்வேறு கோட்பாடுகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது கற்றல் மற்றும் கையகப்படுத்தல் ( learning & acquisition hypothesis)
- உங்கள் தாயிடமிருந்து நீங்கள் உங்கள் தாய்மொழியை கையகப்படுத்தி இருக்கிறீர்கள்( acquired), கற்கவில்லை.
- விழிநிலையில் (conscious)கற்றல்( learning) ஏற்படும், ஆழ்நிலையில்தான்(subconsious) கையகப்படுத்துதல் ( acquisition) ஏற்படும்.
- விழிநிலை கற்றல் ( Conscious learning), மிகவும் சுலபமானது ஆனால் காலப்போக்கில் மறந்துவிடும்(உ.தா: ஆங்கில இலக்கணம், கணக்கு சூத்திரங்கள் ) , ஆழ்நிலை கையகப்படுத்துதல் ( subconscious acquisition) எப்போதும் மறக்காது, உ.தா: உங்கள் தாய்மொழி.
- சிறுவயதில் உங்களுக்கு தன்முனைப்பு (ego) அச்சம் ( anxiety) வெட்கம் , நாணம் (shyness)சிறு துளியும் இருக்காது . அதனால் சொல்லாடல் தவறாக இருந்தாலும் உங்களால் மேற்கூறிய எந்த உணர்விற்கும் ஆட்பட முடியாது
- உதாரணம் : தாத்தா நாளைக்கு ஊருக்கு வந்தார் ( ஆனால் நாட்கள் செல்ல செல்ல நீங்களே சரி செய்து கொள்வீர்கள் )
- ஆனால் வயது முதிர்ச்சி வந்ததும் மேற்கூறிய தன்முனைப்பு, அச்சம், நாணம் அனைத்து உணர்வுகளும் வருவதனால்தான் நம்மால் கையகப்படுத்த முடிவதில்லை.
- என் தாய் மொழி சௌராஷ்ட்ரா. ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில். தமிழ் என் முதன்மொழியானது, அதனால் சிந்திக்கும் ஆற்றல் அனைத்தும் தமிழ் மொழியில்தான்.
- என் உறவுகளை தவிர்த்து என் சுற்றம்(நண்பர்கள், அண்டை வீட்டார்) அனைவரும் தமிழர்களே, அதனால் என்னால் சர்வ சாதாரணமாக தமிழில் உரையாட முடியும், அதற்கு முக்கிய காரணம், நான் தமிழ் மொழியை கையகப்படுத்தி இருக்கின்றேன், கற்கவில்லை.
- அதே போல் என் நண்பர்களும் மிக இயல்பாக என் தாய்மொழியில் உரையாடுவார்கள்.
- எந்த மொழியை கையகப்படுத்த நினைக்கின்றீர்களோ அந்த மொழியில் மட்டும் வாழுங்கள், முடிந்தால் அங்கு சென்றே வாழுங்கள், சுற்றத்தின் ஆக்கபூர்வ தாக்கம் உங்களுக்கு உதவும்.
- மேற்கூறிய உணர்வுகளை பற்றி பயம் கொள்ளாமல் பயிற்சி செய்யுங்கள், எந்த மொழியையும் வசப்படுத்தலாம் .
நன்றி :
- Krashen, Stephen D. Second Language Acquisition and Second Language Learning. Prentice-Hall International, 1988.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.செந்தில் பாபு அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment