துன்பம் வரும் வேளையில் அமைதியாக அல்லது சிரிப்புடன் இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம்
வெற்றி கிடைக்கும் வேளையில் அமைதியாக இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம்
தனக்கென கடுமையான நெறிமுறைகளை கடைபிடிப்பதுடன் பிறரிடம் எளிதான கட்டுக்கோப்பையும் எதிர்பார்ப்பதும் பக்குவம்.
நான் பிறரின் வயலில் ஒரு கரும்பை ஒடித்து தின்ன ஆசைவரும்போது அது அடுத்தவர் பொருள்,அடுத்தவர் உழைப்பில் வந்தது என எண்ணி ஓடிக்காமல் இருப்பதும், என்னுடைய கரும்புவயலில் கரும்பை ஓடித்துத் தின்னும் ஒருவரை ஏதோ ஆசைக்கு ஒருகரும்பை உடைத்துவிட்டார், உண்ணும் பொருள்தானே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியுமானால் எனது மனம் பக்குவம் கொண்டுள்ளது என்று பொருள்.
No comments:
Post a Comment