பழுவேட்டரையர்கள் என்பவர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தில் பழுவூர் என்ற பகுதியை ஆண்ட சிற்றரசர்கள்.
இவர்கள் பெயரை சரித்திரத்தில் இருந்து மற்ற சிற்றரசர்கள் போல மறைந்து இருக்கலாம். ஆனால் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் என்ற அமர கதாபாத்திரங்களை அமரர் கல்கி தன் பொன்னியின் செல்வன் சோழ சரித்திர கதையில் உயிர்ப்பித்து பல வாசகர்களின் மனதில் அழியா நினைவாக்கி விட்டார்.
நாங்கள் வாழ்ந்த ஊர் சரித்திர புகழ் பெற்ற திருப்புறம்பயம். இங்கே ஓடும் மண்ணியாற்று படுகைகளில் சோழ மன்னனைப் பற்றியும் அவருக்கு அங்கு நடந்த போரில் உதவிய பழுவேட்டரையர் என்பவரைப் பற்றியும் கல்கி எழுதியுள்ளார்.
இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.
அந்த போர் நடந்ததற்கான ஆதாரங்கள் உதிரம்பட்டி தோப்பு என்ற ஊரில் கிடைத்துள்ளன.
திருப்புறம்பியம் போர் - தமிழ் விக்கிப்பீடியா
No comments:
Post a Comment