Pages

Thursday, 12 November 2020

இட்லி அறிமுகம் ஆவதற்கு முன்பு தமிழரின் உணவு முறை என்னவாக இருந்தது.

 

இட்லி அறிமுகம் ஆவதற்கு முன்பு….. இட்லி எங்கிருந்து அறிமுகம் ஆனது? இட்லியை அறிமுகம் செய்தவர் யார்? இந்த கேள்விக்கு பதில் தெரிந்த பின்னர் தமிழரின் உணவு முறை பற்றி பார்ப்போம்.

இட்லி இட்டாலியில் இருந்து இங்கு அறிமுகம் ஆன பண்டம் அல்ல. தமிழ் மண்ணில் தமிழ்த் தாய்மார்களால் உருவாக்கப்பட்ட உணவு. ஆவியில் வேக வைப்பதை அவி, அவித்தல் என்பார்கள். இட்டு அவித்த உணவு என்பதே நாளடைவில் இட்டவி……..இட்டலி….. இட்லி… என்று மருவியது. இயல்பாக உண்ட உணவுடன் இட்லியும் இணைந்தது.

இட்லிக்கு முன்பு என்ன உணவு. இட்லி கண்டுபிடித்த நூறு ஆண்டுகளுக்கு முன்பா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா?

ஆதி மனிதன் அவன் பேச ஆரம்பிக்கும் முன் தமிழன், சீனன், ஆப்பிரிக்கன் என மொழிவழி இனவழி தேசம் சார்ந்த மானுடன் இருந்திருக்க மாட்டான். ஆக தமிழனும் ஆதி மனிதனாக இயற்கையாக கிடைத்த காய் கனிகளையே உண்டு வாழ்ந்திருப்பான். இந்த காய்கனிகளை பறவைகள் விலங்குகள் பூச்சிகளுடன் மனிதனும் பங்கிட்டே வாழ்ந்திருக்க வேண்டும். இதனால் சில வேளைகளில் பசித்திருக்க வேண்டியிருக்கும். இதன் பின்னர் மனிதனுக்கு தேவையான உணவை இவனே பயிரிட்டு பாதுகாத்து சேமித்து வைக்கும் பழக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையின் அடிப்படையில் பரிணமித்திருக்கும். உணவை சமைப்பது, சுவையூட்டிகளான உப்பு, காரம் போன்றவற்றை சேர்ப்பது கூட தற்செயலாக நடந்ததை பின்பற்ற ஆரம்பித்து இருப்பான். இதுபோன்ற ஆராய்ச்சியை யாரேனும் அறிவியலாளர்களே செய்து விடை காண முடியும்.

தமிழன் வாழ்ந்த இந்த நிலத்தில் இயற்கையாக என்ன விளைந்ததோ அதையே தமிழன் உணவாக கொண்டிருக்க முடியும். அரிசி, திணை,சாமை, சோளம் கம்பு அவரை துவரை பச்சை பயிறு தட்டை கத்தரிக்காய் பீர்க்கங்காய் புடவை புளி மிளகு இவற்றோடு கடலில் விளைந்த உப்பு, கூடுதலாக கொய்யா வாழைப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சமைத்து அல்லது சமைக்காமல் உண்டிருப்பான். தீயில் நேரடியாக வேக வைத்தும் உண்டிருப்பான். மனிதனின் பற்கள் தாவர உண்ணிகளின் பற்கள் போல தட்டையாக இருப்பதால் மாமிச உணவுகளை உண்டிருப்பானா என்பது சந்தேகம். ஆனால் கீழடி அகழாய்வில் கிடைத்த விலங்குகளின் எலும்புகள் சொல்லும் சாட்சி, பரிணாமம் பெற்ற தமிழன் விலங்குகளையும் புசித்திருப்பான் போலும். வேட்டைக்காரன், பரதவன் போன்ற சொற்கள் தமிழன் விலங்கு மீன் போன்றவற்றை புசித்திருக்கும் சாட்சிகள்.

இப்படி பரிணாமம் பெற்று வந்த உணவுகள் தான் இட்லி தோசை பணியாரம், சட்னி சாம்பார் வடை போண்டா பஜ்ஜி….

அப்புறம் இட்லியை பற்றி ஒரு இங்கிலீஷ் காரர் கமெண்ட் அடிக்க, தமிழர்கள் எதிர்ப்பைக் கண்டு இட்லியை சாப்பிட வைத்த தென்னாட்டு மக்கள்

Idli-gate: A British Professor Who Called Idli 'Boring' Led to a South Indian Revolt on Twitter

இட்லியைத்தாண்டா கேட்டேன்… ஒரு இட்லிக்கு இத்தனையும் இழுத்தா… தாங்காதுடா தாங்காது…. இனி இட்லியை பத்தி அல்ல சட்னியை பத்தி கூட கேட்க மாட்டேண்டா… என வடிவேல் போல கேள்வி கேட்டவரின் மைண்ட் வாய்ஸ் கேக்குறது

பிற்சேர்க்கை: Mr. Saravanan Ramamoorthi என்பவர் பின்னூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர் கேள்வி கேட்டேன், அவரிடமிருந்து பதிலில்லை. இட்லி தொடர்பாக ஆங்கில கோரா, இணைய பக்கங்கள் போன்றவற்றில் தேடியதில் விக்கிப்பீடியாவில் என்ன இருக்கிறதோ அதே சாராம்சங்கள் அதே வரிகளில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. கேடி ஆச்சார்யா என்பவர் இந்தோனேசியாவில் இருந்து வந்ததாக தெரிவித்ததையே பலரும் மேற்கோள் காட்டுகின்றனர். இந்தோனேஷியாவில் கெட்லி kedli என்று இருந்ததாகவும் அதுவே இந்தியாவிற்கு 800–1200 ஆண்டுகளில் வந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால் கெட்லி என ஒரு உணவே இந்தோனேசியாவில் இல்லையாம். எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இதை தெரிவித்தார் என தெரியவில்லை. உலகில் எந்த பகுதியில் இருந்து இட்லி வந்திருந்தாலும் அதனை சான்றுகளுடன் தெரிவித்தால் ஏற்பதில் பிரச்சினை இல்லை.


இந்த பதிவுகளை வழங்கிய திரு.பழசெல்வராஜ் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!


                     தமிழால் இணைவோம் !!!
                       அறிவால் உயர்வோம் !!!
                                தமிழ் வாழ்க !!!
                அறிவியலின் தேடல் தொடரும்.
                            வலியே  " வலிமை "
                        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment