கண், நயனம், நேத்திரம், நாட்டம், நோக்கம், சால் / சக்கு, அக்கம் /அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, தாரை, விழி, விலோசனம், பார்வை, அம்பகம், கோ - இவையனைத்தும் கண்ணைக் குறித்த தமிழ்ச் சொற்களாகும்.
கண் - துளைப் பொருள் குறித்தமைந்தது. (உதா: கண்மாய், பலகண்ணி).
விழி - விரியும் தன்மை குறித்தமைந்தது. இமைகளை விரித்துக் காண்பதால் கண் விழியாயிற்று.
விலோசனம் - வில்லின் வளைபொருள் ஒத்த பண்பைக் குறித்தமைந்தது.
அக்கு , அக்கி , அக்கம் - அகண்ட பொருள் குறித்தமைந்தது.
(காமாக்கி, மீனாக்கி, அக்கம் பக்கம்).
சால் , சக்கு = அகண்ட தன்மை குறித்த
(அகல்)ஆல் - சால் எனத் திரிந்தது.
அக்கு - சக்கு ஆனது.
நேத்திரம் = நேர் கொண்ட திறனைக் குறித்தது.
திருக்கு, திட்டி, திருட்டி = திருகும் தன்மை குறித்து அமைந்தது.
நோக்கம் , நாட்டம் - விருப்பம் , கவனம், ஈர்ப்பு ...குறித்து அமைந்தது.
அம்பகம் - கூர்மைப் பொருள் குறித்தமைந்தது.
தாரை - கண்ணீர் வழியும் பண்பு குறிக்க அமைந்தது.
பார்வை - பரந்த தன்மை குறித்து அமைந்தது.
நயனம் - கண்ணின் திறன், சிறப்பு, அழகைக் குறித்து அமைந்தது.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment