Pages

Tuesday, 10 November 2020

ரோமர் என்ற சொல்லுக்கு தமிழ் தூய சொல் யவனர்.

 ரோமர்களை, யவனர் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல, அரேபியர்கள் எவ்வாறு குறிக்கப்பட்டிருகின்றனர்?

`யவனர்` என்ற குறிப்பிடப்பட்ட வகையினுள் உரோமர்கள் வருவார்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் அவர்கள் மட்டுமே யவனர் அல்ல. `யவனர்` பற்றிய சங்க காலப் பாடல்களும், தமிழகத் தொல்லியல் ஆய்வுகளும் கிரேக்க பெரிப்பிளசின் குறிப்புகளோடு ஒத்துப் போவதால் கிரேக்கர்களும் அப் பிரிவினுள் வருவார்கள்.

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யவனர்களை `மிலேச்சர்கள்` என்றும், `துருக்கியர்கள்` என்றும் சொல்கிறார். துருக்கியர்களையும் ஒரு வகையில் அராபியர்கள் எனக் கொள்ளலாம் அல்லவா! {இன்றைய நாட்டு எல்லைகள் அன்றில்லை}. எனவே `யவனர்` என்பது அரேபியர்களையும் சேர்த்தே குறிக்கும்.

"வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான்"

:சிலப்பதிகாரம் - வாழ்த்துக்காதை - பாடல் எண் 26.

இங்கு குறிப்பிடப்படும் `யவனர் நாடு` எது? பல குழப்பங்கள் உண்டு. வெளியார் எல்லோரையும் `யவனர்` எனக் குறிப்பிட்டுள்ளார்கள், சூழலுக்கேற்ப நாமே வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது முடிவு.

பிற்காலத்தில் அரேபியர்களைக் குறித்த சொல்லாடல்களையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கம்பர் வரிசையாகக் குதிரைகளைக் கட்டி வைத்தல் குறித்துச் சொல்லும் போது `துருக்கர் `தர வந்த என்று பாடியுள்ளார் {பால காண்டம்}.

'இராவுத்தர்' என்ற பெயரும் குதிரை வீரன் என்று பொருளில் அராபியர்களைக் குறித்தது. {`ராவுத்த ராயன்` : திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்}

கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்ற பொருளில் `மரைக்காயர்` எனவும் அழைக்கப்பட்டார்கள் {மரக்கலம்+ஆயர் >>>>மரைக்காயர்}.

` துலுக்கர்' என்பது பெரும்பாலும் `துருக்கியர்' என்ற சொல்லின் மருவலாகவிருக்கலாம்.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு .இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!

No comments:

Post a Comment