Pages

Tuesday, 10 November 2020

"களவும் கற்று மற" என்ற பழமொழி விளக்கமும் , பொருளும் .

 "களவும் கற்று மற" என்ற கூற்று ஏன் சொல்லப்பட்டது?



சங்க இலக்கியம் பற்றி உங்களுக்கு தெரியும் தானே.

அதற்கு முன்பாக, "களவும் கற்று மற" எதற்காக? களவை ஏன் கற்க வேண்டும் ஏன் மறக்க வேண்டும்? லாஜிக் ஒன்னும் இல்லையே. உங்கள் மகனோ அண்ணனோ தம்பியோ அப்படி களவில் - திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டால் "களவும் கற்று மற" என்ற பழமொழிக்கு ஏற்ப திருடினான் என்றால் விட்டு விடுவார்களா? இல்லை உங்கள் வீட்டில் இந்த பழமொழிக்காக தினமும் ஒருவன் வந்து திருடினால் "ஆஹா அருமை, திருடட்டும் திருடட்டும், பழமொழி காப்பாற்ற திருடுகிறார்கள், இவர்கள் இலக்கிய திருடர்கள்" என விட்டு விடுவீர்களா? (நீங்கள் என்பது இங்கு கேள்வி கேட்ட நீங்கள் அல்ல. மக்கள்)

அகமும் புறமும். அக வாழ்வில் களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும் அனுமதிக்கப்பட்டது. பாழாய் போன நவயுக பெண் பார்க்க போவது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவை அந்த காலத்தில் இல்லை. ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும். பிடித்து இருந்தால் காதலிப்பார்கள். இதற்கு பெயர் தான் களவு வாழ்க்கை. அப்படி காதலித்த பெண்ணையே மணம் செய்து குடும்பம் நடத்துவது கற்பு வாழ்க்கை. இதைத்தான் "களவும் கற்பும் அறம்" என்றனர் இலக்கியம் படைத்த முன்னோர். எதையும் வேகமாக பேசும் மக்கள் களவும் கற்று மற என்று சொல்லி அதுவே பழமொழி ஆகிப் போச்சு.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment