Pages

Tuesday, 10 November 2020

மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களை, மருதநாயகம் ஏன் கொன்றார்

 ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களை, மருதநாயகம் ஏன் கொன்றார்?

மருதநாயகம் பிள்ளை என்கிற முகமது யூசுப் கான் சாகிப் (1725–1764) அப்போது நவாப் மற்றும் ஆங்கிலேயே கும்பனியின் கூட்டுப்படைக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு ஒப்பற்ற வீரர். அதன் படைத்தலைவராகவும் விளங்கியவர்.

இவரை பயன்படுத்தி கும்பனிக்கு கட்டுப்படாத பாளையக்காரர்களை வேட்டையாடியது நவாப் மற்றும் கும்பனியின் கூட்டுப்படை. அதற்கு பிரதியுபகாரமாக நாயக்கர்கள் ஆட்சி முடிவடைந்த சமயத்தில் மதுரையை ஆளும் உரிமையை இவருக்கு ஆங்கிலேயர்கள் தந்தனர்.

வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

முகம்மது யூசுப் கான் தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

மருதநாயகம் என்கிற கான் சாகிப் (1725–1764):

வீரன் அழகுமுத்துக்கோன் (1728-1757) :

இது தான் ஆங்கிலேயர் நம் விரலைக்கொண்டே நம் கண்ணை குத்திய வரலாறு,

ஒப்பற்ற வீரர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்ட பின்னர், கடைசியில் இருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களாலேயே கொல்லப்பட்டனர்!


No comments:

Post a Comment