Pages

Tuesday, 10 November 2020

சேலை என்ற சொல்லிற்கு தூய தமிழ் சொல்

 சேலை மற்றும் சீலை, பொருள் வித்தியாசம் 

ஆதியில் 'சீரை' - என அழைக்கப்பட்டது திரிந்து சீலை ஆனது. சீலை - என்பதே பின்னர் சேலை ஆனது.

சீரை > சீலை > சேலை - இவை மூன்றும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வழங்கப்பட்ட பெயர்கள்.

தமிழ் மொழியின் தொன்மையை இவ்வுலகிற்கு பறைசாற்றும் சொற்களில் ஒன்று சீரை. ஆதிமாந்தன் காடுகளில் திரிந்த காலத்தில் மரப்பட்டையையே ஆடையாக அணிந்துகொண்டிருந்தான் என்பதை நமக்கு உணர்த்தும் சொல்லே சீரை.

சீரை - என்பது மரவுரியைக் குறித்த பழஞ்சொல். (cīrai s. the bark of a tree used as clothing, மரத்தின் பட்டை /மரவுரி.

சிரைக்கப்பட்டது - சீரை ஆனது.

  • சிரை > சீரை = செதுக்கப்பட்ட மரப்பட்டை, மரவுரி.
  • சிரை > சிரைத்தல் = செதுக்குதல், மயிர் கழித்தல், புற்களைச் செதுக்குதல்.

இன்றைக்கும் கிராமப்புறங்களில் ‘சீலை’ என்ற சொல்லை வழக்கில் காணலாம்.
நகரங்களில் ‘சேலை’ என்கிறோம்.
கன்னட மொழியில்‘சீரெ’ என்கிறார்கள்.

‘உடையும் சீரை, உறைவது காட்டிடை.’ எனத்தேவாரத்தில் திருநாவுக்கரசர் சிவபெருமானைக் குறிப்பிடுவதைக் கொண்டு சிவன் அணிந்ததும் 'சீரை' என்ற மரவுரியையே - என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

No comments:

Post a Comment