தமிழ்நாடு பற்றி தகவல்கள் கூறுவதில் நான் பெருமை அடைவேன். நிறைய விஷயங்கள் தமிழ்நாட்டை பற்றி இருக்கிறது. அதிலும் நிறைய பேர் அறிந்தும் நிறைய பேர் அறியாமலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
அதன் தொகுப்பு :
- ராஜேந்திரன் போல ஒரு கடற்படை தளபதி இந்தியாவில் இல்லவே இல்லை. எத்தனை மன்னர்கள் இந்தியாவை ஆண்டாலும் சோழன் ராஜேந்திரனின் கடற் போர்முறை மற்றும் கடற்படை கிட்ட கூட வரமுடியாது.
- அதிகமான சிவனின் திருவிளையாடல்கள் பாண்டிய நாட்டில் தான் நடந்து உள்ளது. மேலும் மதுரை சுற்றி இருக்கும் இடங்களில் தான் அவை நடந்து உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதற்கு சான்று.
- இந்தியாவில் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் (49 சதவீதம்) உள்ளது, இது நகர்ப்புற மக்களில் 9.6 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் உள்ளது.
- உலகத்தில் மிகவும் பழமையான மொழி தமிழ். இந்த தமிழ் இன்றளவும் உலகம் முழுவதிலும் பேச படுகிறது. ஆனால் சில இடங்களில் பேசப்படும் தமிழ் பண்டைய கால தமிழ் என்று நம்பப்படுகிறது.
- தமிழ்நாட்டில் ஆசீவகம் பௌத்தம் சமணம் வைணவம் மற்றும் சைவம் இருந்தது. ஆசீவக முனிவர்களை அசோகர் சமணர்கள் என்று நினைத்து கொன்றார். சமணர் கழுவேற்றமும் நடந்தது
- ரோமானிய மற்றும் கிரேக்க வர்த்தகர்கள் பண்டைய தமிழ் நாடு, இன்றைய தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு அடிக்கடி சென்று, தமிழ் மாநிலங்களான பாண்டிய, சோழர் மற்றும் சேர வம்சங்களுடன் வர்த்தகத்தைப் பெற்றனர்.
- கொடுமணல் என்னும் ஊர் தான் Rome நாட்டுடன் நாம் செய்த வணிகத்திற்கு சாட்சி என்று நிறைய பேர் கூறி உள்ளனர். அவர்களுக்கு துணி எல்லாம் இங்கிருந்து தான் சென்று இருக்கிறது.
- சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு 3000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர்களின் காலத்தில் வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் செழித்து வளர்ந்தன.
- கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் தமிழ் ஒரு சொற்பொருள் அடுக்கை உருவாக்கியது என்ற தனது கோட்பாட்டின் மூலம் ஜப்பானில் சுசுமு Ōno கூறியுள்ளார்.[1]
- தமிழ்நாட்டில் இருந்த மக்களுக்கு அப்போதே வீரம் என்பது புகுத்த பட்டு இருந்ததால் தான் இங்கு நிறைய "Martial Arts" கலைகள் உள்ளன - முக்கியமாக அடிமுறை மற்றும் மள்ளர்ககம்பம்
- கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த நாடும் தமிழ்நாடு தான். சங்க காலத்தில் நிறைய நூல்களும் எழுத பட்டது. தமிழரின் பழம் பெரும் தொல்காப்பியமும் அதில் அடக்கம்.
- புகழ்பெற்ற பார்வோன் துட்டன்காமனின் தாத்தா தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு திராவிடர். இது சர்ச்சைக்குரிய விஷயம் என்றாலும் நிறைய அறிவியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆமாம் என்று கூறுகிறார்கள்.
- ஒரு குடுவையின் இருபுறமும் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாடி ஒரு பண்டைய எகிப்திய துறைமுகமான குசீர்-அல்-காதிமில் காணப்பட்டது இது கிமு 1 ஆம் நூற்றாண்டில் எகிப்து ரோமானிய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இது தமிழர் அங்கும் சென்று இருக்கலாம் என்று கூறுகிறது
No comments:
Post a Comment